Posts

Showing posts from May 30, 2011

எல்லாமுமான என் ஆயா சரோஜாம்மா

எல்லாமுமான என் ஆயா சரோஜாம்மா ,உன் நினைவலைகளில் என்னை மன்னிப்பாயா ? அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது என்று எண்ணுகின்றாயா ? நான் நம்பிக்கை கொண்டுள்ள  அன்பில் தவறும் ,துரோகமும் வளர்த்தெடுக்கப்படுகிறது ஆயா,நீ இல்லாமல் இருப்பதால் இப்பொழுது நடக்கின்ற வாழ்வில் எனக்கு என்னமோ நடந்து கொண்டிருக்கிறது நான் என்ன செய்வேன் ஆயா .என் கண்ணீரில் இருப்பது உன் பிரிவு மட்டும் அல்ல இதை நீ மட்டுமே உணர்வாய் உணர்ந்தும் இருக்கிறாய் .என் வாழ்வின் அடுத்த நிலைக்கு நம் குடும்பம் என்னை தயார் செய்து கொண்டிருக்கிறது .எல்லாமும் அறிந்துள்ள உன்னால் இப்பொழுது தீர்வு சொல்ல முடியாது ஆயா .உன் வழிகாட்டுதலில் ஆண்டுகள் சென்றாலும் நம் பெருங்கனவு உணர்த்தி கொண்டிருக்கிறது .என் ஒவ்வொரு வலிகளிலும் உன் நினைவுகளால் நிறைவு செய்கிறாய் . அனைத்து உறவுகள் இருந்தாலும் என்னை புரிந்து கொள்கின்ற ஒரே உறவு நீ மட்டுமே ஆயா .என் தனிமை பல விபரீத எண்ணங்களை உருவாக்கிறது என்ன செய்வேன் ஆயா .என் எண்ணங்கள் அனைத்தும் கேட்பதற்கு யாரும் இல்லாததால் பகிர நிறைய இருக்கிறது ஆயா ,சென்ற வாரம் ஊருக்கு சென்றேன் ஆயா வழக்கம் போலவே அப்பா ,அம்மா செயல்பாடுகள் அண்ணனும் அப

புன்னகையானது :).

Image
சிறிய வயதில்  பூத்த புன்னகையை  அனைத்தும்  இன்றைய நாட்களில்  அதிகம் தேடப்படுகின்றன . இருகும் மனதிற்கு  ஆறுதல் சொல்லும்  தன்மைகள் அதில்  அடங்கி இருப்பதாக  நம்பிக்கையாக்கப்படுகின்றன . தேடலின் முறையே  புன்னகையின் உருவாக்கம்  அதற்கான தோன்றலின்  இருப்பிடம் இன்னும்  இருக்கின்றதா  என்ற சந்தேகம்  விதைக்கப்படுகின்றன . காரணங்கள்  அவசியமில்லை என்றாலும்  புன்னகை வீற்றிருக்கும்  அமைவை  தெய்வமாக்கப்படலாம். எதிர் மறை துயரம்  தூற்றிக்கொண்டிருக்கிறது   தன் நன்றி கேட்ட செயலை  உண்மையை உணர்ந்த பின்  பேரமைதியை தன் இயல்பாக  ஏற்று கொண்டிருக்கலாம் . போலி புன்னகையில்  புதைந்து போகிறது  காரணமற்ற சுய எண்ணங்கள் . இன்றைய அதனின் தேடல்  சிறு வயது புன்னகையானது   :).                                                -வளத்தூர் தி.ராஜேஷ் .

நீயும் நானுமாக

Image
என் தீயதனை  வென்றிட  உன் வன்மம் கொள்கின்ற  நினைவுகள் தேவையாய் இருக்கவில்லை . வெளியேற்றப்படும்  என் அக உணர்வை  உன் இயல்பாக தொற்றிக்கொள்கிறது  சிறிதும் வெட்கமின்றி . அதன்  அச்சத்தின்  விளைவை  உன் பொய்மையில் வேருன்றப்படுகிறது . சிதறிய உண்மைகள்  ஒவ்வொன்றிலும்  நீயும் நானுமாக  பிம்மப்படுத்தலாம்.                      - வளத்தூர் தி .ராஜேஷ் 

வழங்கப்பட்டிருக்கின்றதா?- திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை  நன்றி திண்ணை மற்றும் நண்பர்களுக்கும் . http://puthu.thinnai.com/?p=629