Posts

Showing posts from August 24, 2011

தோல்வியின் அக மவுனம்

வீட்டின் சிதைந்த  கனவுகளில் பல  இன்னுமும்  விடியலை நோக்கி  பயணிக்கிறது  அவற்றில் ஒன்று  என் தோல்வியை  சார்ந்தது . இன்று வரைக்கும்  அதற்கான வருத்தம்  உணரவில்லை  என் தவறுகள்  ஒளிந்துகொள்ள  யாரும் அறியாத  ஒரு கொள்கையை  காரணமாக்குகிறேன். ஆயாவிடம்  என் முதல்  அக மவுனத்தை  வழங்குகிறேன்  நீடித்து கொண்டே  பெருகுகிறது . அம்மா அப்பா  அதே அக மவுனத்தை  என்னிடம்  வழங்குகிறார்கள் இங்கு   கொடுப்பதை  காட்டிலும் பெறுவது  கடினமாகிறது . அண்ணனும் தம்பியும்  இவ்வாறாகவே  தொடர்கிறார்கள் . தோல்வியின் அமைவு  இயலாமையை  காட்டி கொடுப்பதல்ல  நம்பும் நம்பிக்கையை  ஈடேற்றுவது என்று  யாரும் அறிந்திருக்கவில்லை . நண்பர்களும் சமூகமும்  பல இழிவுகளை  என் மீது  உமிழ தயாராகவே  இருந்தனர் . பெற்றிருந்த  அக மவுனம்  இறுதி வரையில்  பாதுகாத்து கொண்டிருந்து . இப்படியான அழகியல்  வாய்ந்ததாக  அமைந்து இருந்தது  என் +2  பொது தேர்வின்  தோல்வி .               -வளத்தூர் தி.ராஜேஷ்