Posts

Showing posts from November 27, 2012

அசைவுறும் பிரபஞ்ச நிழல்.- உயிரோசை.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6104 தன் உணர்வில் மீண்டும்   அமர்த்தியது இரவு   அன்று இட்ட இருள் சூழ . இருள் தகித்துக் கொண்டிருக்கையில்     நிழல் மட்டும் மவுனம் கொள்ளும்     இரவு இது . கட்டற்ற அமைதி இரவை சூழ தன்   நிழல் தனித்து விடப்படுகிறது . பின் பற்றக்கூடிய நிழலில் அமர்ந்து     ஒளியின் பிரதிபலிப்பை     என் கனவின் பிம்பமாக மாற்ற முயல்கிறேன் . தன் இருண்மையை மலரச் செய்யும்     மனமாக வகை புரி . இயற்றி விட்ட இருப்பு     தன்னை தகவமைத்துக்கொள்ள     என் நிழலை இன்னும்     தேடுதலின் இயக்கமாக     மாற்றி விட்டிருக்கிறது இவ்விரவு . தீ ஒளிர ஒளிர வெப்பத்தை நனைக்கும்     பனி இரவுகள் . உன் ஒளி தூது செல்ல     என் இருளே எங்கும் நிறைகிறது .                           - வளத்தூர் தி .ராஜேஷ்  அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .