அந்நிழல்.
ஓர் நிழல் தன்னை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. எதன் தொன்மையின் எச்சங்கள் அவை அதற்கென்று பல்நிலை தன்மையின் உலகங்கள் இயங்கி கொண்டிருக்கிறது . வேரூன்றி உலவும் நிழலில் என்னை ஆட் கொண்டிருக்கிறது காலத்தின் அசைவு அதன் கனவுகளாக என்னிடமே உலவுகிறது அந்நிழல் . இரவென்றும் பகலென்றும் ஏதும் பொருட்படுத்தாமல் தன்னை நோக்கியே வந்து கொண்டிருக்கிறது அந்நிழல் . அதனிடம் எதையாவது பகிர்வதற்கு எண்ணற்ற மன அடுக்குகள் நிறைந்து வைத்திருக்கிறது காலம் . நிழல் என்னிடம் ஏதும் கூறுவதில்லை அதன் இருப்பில் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது . அனைத்தின் கற்பனையின் ஆதியை மட்டுமே வழங்கி கொண்டிருக்கிறது . நினைவிற்கும் உண்டோ காலத்தின் நிழல் அவை தன்னின் ஒளியின் கருவியாக்கி விட்டிருக்கிறது . -வளத்தூர் தி .ராஜேஷ் .