Posts

Showing posts from October 10, 2011

திறவுக்கோல்-திண்ணை.

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=4854 அகம் சார்ந்த  வாழ்வை பழித்து விடப்பட்டிருக்கிறது  ஆதலால்  முன்னோர்களின்  வழியின் திறவுக்கோல்  வைத்து  சரிப்பார்த்துக்கொள்ள  முடிகிறது  நான் எதிர் கொள்ளும்  அனைத்தின் விளைவுகளும் . இதில்  திறவுக்கோல்  அளவுகள்  பரிசோதிக்க  அவசியம் இருக்கவில்லை  அனைத்துக்குமான  நிறைவை  உள்ளடக்கியது இவை . என் அகம்  பிரபஞ்ச தொன்மையில்  தொலைந்து போயிந்த ஒன்று  வார்த்தையின் தேடல்களில்  அவை சிக்குவதில்லை   மன உணர்வின்  அதிர்வுகளும்  அறிவதில்லை . கிடைக்க பெறாத  எதுவுமே  நம்பிக்கையாக்கப்படுவதால்   அவ்வண்ணமே  நானும் ஆக்கப்பட்டேன் . கொடுர நம்பிக்கை கொண்டு   திறக்கப்பட்ட  அதன் வினையின்  கணம்  மேலும் அழுத்தத்தின்  வெற்றிடமாகவே  காட்சிப்படுத்துகிறது  ஒளிகளின் சேர்ப்பு. கிடைக்க பெறாத அகமும்  திறவுக்கோலும்   அதன் நம்பிக்கைகளும்  முன்னோர்களின் வழியே  தேடும் பொருளாக  உலவுகிறது  என்  பிரபஞ்ச கனவுகள் .                       வளத்தூர் தி.ராஜேஷ