ஆற்றாமை
நிர்பந்தங்களின் ஆளுமை என்னில் நீடிக்கின்ற வரையில் கட்டுப்பாடுகள் நீள்கிறது மற்றொருவனை தேடி .. பிறப்பிக்கப்பட்ட விலகல் உனக்கான ஆயுதமாகும் போது தனித்து விடப்பட்ட அன்பு மவுனமாகுது .. அறிந்திராத நிகழ்வை உண்டாக்கி பிறர் காண வண்ணம் வாழ்வதனை உரமேற்றுகிறாய் .. எண்ணியவை நானாக எந்தன் ஆற்றாமை கொண்டு நீயாகிறாய் . -தி .ராஜேஷ் .