Posts

Showing posts from January 15, 2011

ஆற்றாமை

நிர்பந்தங்களின்  ஆளுமை  என்னில்  நீடிக்கின்ற வரையில் கட்டுப்பாடுகள்   நீள்கிறது  மற்றொருவனை  தேடி .. பிறப்பிக்கப்பட்ட  விலகல்  உனக்கான  ஆயுதமாகும் போது தனித்து விடப்பட்ட அன்பு   மவுனமாகுது .. அறிந்திராத  நிகழ்வை  உண்டாக்கி  பிறர் காண வண்ணம்  வாழ்வதனை  உரமேற்றுகிறாய் .. எண்ணியவை  நானாக  எந்தன்  ஆற்றாமை  கொண்டு  நீயாகிறாய் .                -தி .ராஜேஷ் .  

பூரணத்துவம்

ஒன்றின் விருப்பம்  எதில் இருந்து  தொடங்கப்பட்டதோ  அங்கயே முடிவதில்  ஒரு பூரணத்துவம்  நிரம்புகிறது .. அது அவ்வளவு  சுலபமில்லை  நாடும்  விருப்பத்தின்  மனம்  நாளும்  அலைந்தோடுவதால் எவ்விதம்  சாத்தியப்படும் இவை . நிறைவை உண்டாக்க  அவசியம்  இல்லையென்றாலும் பின்பற்றவையில்  முந்துவது  இவையே .. அந்த ஒன்றினை  எவ்விதம் தேர்ந்தெடுப்பது என  குழப்பத்தின்  அதிர்வு  எல்லையில்லாமல்  விரிகிறது ..                 -தி .ராஜேஷ் .