யாருமற்ற தனிமையில் தன் ஆதியின் நினைவு அழுத்திய இரவில் மனத்திரையின் வழியே தன் சுயம் விழித்து கொண்டது . இனி அகால நினைவின் விளிம்பில் எதனை ஈட்டி கொண்டிருக்கும் சுயம் . -வளத்தூர் தி.ராஜேஷ்.
ஆதியின் ஒளி தன் நிழலை இன்னுமும் பார்த்திருக்கவில்லை . அது தன் இருப்பை தேடி அலைந்து கொண்டிருக்கிறது வெளி போதுமானதாக இல்லை எதிர்படும் காலத்தில் தன் இறுதியை அடைந்துவிடவில்லை. இருந்தும் ஒளியின் கானலில் வெளி தன் உணர்தலின் இறுதி தான் . -வளத்தூர் தி.ராஜேஷ்.