ஒளி.

ஆதியின் ஒளி
தன் நிழலை
இன்னுமும் பார்த்திருக்கவில்லை .

அது தன் இருப்பை
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
வெளி
போதுமானதாக இல்லை
எதிர்படும் காலத்தில்
தன் இறுதியை
அடைந்துவிடவில்லை.

இருந்தும்

ஒளியின் கானலில்
வெளி
தன் உணர்தலின் இறுதி தான் . 

                    -வளத்தூர் தி.ராஜேஷ்.
                      

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு