Posts

Showing posts from August 29, 2011

உறுதியின் விதைப்பு.-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது  கவிதை . http://puthu.thinnai.com/?p=3711 தன் உறுதின் மீது  கலைந்திருக்கும்  சிறு சிறு  நம்பிக்கைகளை  சேகரிக்கிறேன் . நாளையின் மீது  அவை இன்னும்  நிர்பந்திக்கவில்லை  இன்றைய  இப்பொழுதைய  கடக்கும் நிமிடத்தில்  தனக்கு உண்டான  கட்டமைப்பை  சரி பார்த்து  கொள்கிறது . இயங்குதலில்  கவலை கொள்வதில்லை  அது  என் பிரபஞ்சம்  பார்த்து கொள்கிறது . என் இருப்பின்  என்றைக்குமான  அவசியம்  தன் எண்ணத்தின் உறுதியில்  திளைத்திருப்பது  வெறும்  கற்பனை கொண்ட  கனவல்ல  என்பதை நிருபணம்  செய்வதே . பகடை செய்யப்பட்ட  வாழ்வு அல்ல  மற்றவர்கள் தீர்மானம்  என் மீது  நடைபெறுவதற்கு . உறுதி கொண்ட   எண்ணங்களை  வழிமறித்து  உரமேற்றுகிறது  தோன்றலின் விதைப்பு . என் விடியலின் பேரொளி  அகத்தில் நெருங்குகிறது .                                      -வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு ..