உறுதியின் விதைப்பு.-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது  கவிதை .


http://puthu.thinnai.com/?p=3711


தன் உறுதின் மீது 
கலைந்திருக்கும் 
சிறு சிறு 
நம்பிக்கைகளை 
சேகரிக்கிறேன் .

நாளையின் மீது 
அவை இன்னும் 
நிர்பந்திக்கவில்லை 
இன்றைய 
இப்பொழுதைய 
கடக்கும் நிமிடத்தில் 
தனக்கு உண்டான 
கட்டமைப்பை 
சரி பார்த்து 
கொள்கிறது .

இயங்குதலில் 
கவலை கொள்வதில்லை 
அது 
என் பிரபஞ்சம் 
பார்த்து கொள்கிறது .

என் இருப்பின் 
என்றைக்குமான 
அவசியம் 
தன் எண்ணத்தின்
உறுதியில் 
திளைத்திருப்பது 
வெறும் 
கற்பனை கொண்ட 
கனவல்ல 
என்பதை நிருபணம் 
செய்வதே .

பகடை செய்யப்பட்ட 
வாழ்வு அல்ல 
மற்றவர்கள் தீர்மானம் 
என் மீது 
நடைபெறுவதற்கு .

உறுதி கொண்ட  
எண்ணங்களை 
வழிமறித்து 
உரமேற்றுகிறது 
தோன்றலின் விதைப்பு .
என் விடியலின் பேரொளி 
அகத்தில் நெருங்குகிறது .
                                     -வளத்தூர் தி.ராஜேஷ் .

அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு ..

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு