Posts

Showing posts from April 20, 2011

கருத்தின் வாழ்த்துகள்

Image
தன்னை  ஏற்றுகொள்ளும் ஒரு கருத்தை  இது வரை அறிந்திருக்கவில்லை காலம்  அதன் மாற்றத்தில் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு நிலையை அடைந்திருக்க நூற்றாண்டின் விளைவை உயிரினத்தில்   புகுத்தும் உண்மையான ஒன்று இன்னும்  உருவாகியிருக்கவில்லை . கருத்தின் செறிவு தன் ஆளுமைக்கு  உட்பட்டதாகவே இன்று வரையிலும்  பின்பற்றப்படுகிறது . நிர்பந்தம் ஏன் உங்களை சிந்திக்கவைக்கவில்லை  ஒரு வேளை பின்பற்றபட்டவையே இறுதி என  உங்களை நம்ப செய்யும் சூழ்ச்சியில்  உறங்கி உறைந்து போய்விட்டிர்களா  எதுவாயினும் நிகழ்த்தி கொண்டிருப்பவை  உங்களால் நிர்ணியம் செய்ய கூடியவை அல்ல . கருத்தில் உங்கள் சாதகங்களை முதலில் தேடுகிறிர்கள் அவ்வாறு இல்லையெனில் எளிதாக புறகணிக்க முடிகிறது  கருத்தின் நம்பிக்கை எதுவரை வரையறுக்கப்படுகிறது  என சந்தேகம் உங்களுக்கு இது வரை வந்திருக்க வாய்ப்பில்லை . ஒரு வேளை என் பிதற்றல் அறிந்திருக்குமோ என்னவோ  எனக்கான கருத்தில் உங்களை நிச்சையமாக காண இயலாது  அந்த கருத்தின் இயலாமையில் தொற்றி கொண்டிருக்கலாம்  அப்பொழுதும் என்னால் உணரமட்டுமே முடியும் . உங்கள் கருத்தை நீங்கள் அறிந்து கொள்ளும் முன்  கருத்தின் தோற்றம் இறுதி நிலையை அ

சுயம்

Image
என் ஒவ்வொரு வெளியேற்றத்திலும் தன் இயல்பு மறைக்கப்படுவதை சுயம்  இதுவரை அறிந்திருக்கவில்லை  எதையும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை  நம்பும் காரணிகளும் ஏராளம் இருக்கிறது . தன் பொழுதை போக்க நேரங்களை  என்றும் பொருட்படுத்தியதில்லை சுயம்   இன்று வரை என்னை அறிந்து கொள்ளும்  காலத்தை ஒதுக்கவே இல்லை . என்னை தவிர்க்க செய்யும் ஆற்றல் சுயத்திற்கு  உள்ளதென அறிந்தும் விருப்பம் மட்டும்  குறைந்தப்பாடில்லை . மற்றவற்றையை குறிப்பாள் கூட அறிய  முடிந்ததை என்னை பற்றி மட்டும்  அறிய  முடியாமல் போனது என் சுயத்தின் குற்றமே  சில தனிமைகள் தன் சுயத்தை காட்டினாலும்  அவை கானல் நீராகவே உணரவைக்கிறது . சுயம் உணரக்கூடிய ஒன்றாக இருக்கும்  என் மரணத்தின் மீது குடி புகும் . இல்லையனில்  என் கற்பனையை வளர்த்து விடும் துரோகத்தின்  சின்னமாக எப்பொழுதும் வீற்றிருக்கும் .                                                                 -  தி .ராஜேஷ் .