Posts

Showing posts from October 22, 2012

சிற் சில கனவுகளின் கானல்-உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6034 தன் இருண்மையின் அகழியில் பயணம் செய்கிறது சுயம் . பெருவெளியெங்கும் தன் மவுனத்தை தூது அனுப்பி கொண்டிருக்கிறேன் அவை ஆதியின் முதல் மவுனத்தில்  சரண் புகும் . எதையும் உடைத்தெறிக்கும் முன் என் அடக்கமுறையின் மவுனத்தின் கணம் எதையும் செய்து விட கூடும் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படுகிறது பிறிதொரு மவுனத்தில் . அண்டமெங்கும் சரிய அதன் விளிம்பில் தொற்றிக்கொண்டிருக்கும் தன் வினையை சான்றாக்குகிறேன். என் தயக்கத்திற்கு என்று ஓர் மவுனத்தை அணிந்து கொண்டிருக்கிறேன் அதில் எப்பொழுதும் உன் பிரதிபலிப்பே காணுகிறேன் . ஐம்புலன்களும் நிர்ணியம் செய்து கொண்டிருக்கும் காலத்தில் இருந்து விலகி இன்னும் பிற சாத்தியங்களை கொண்டு உருவாக்கப்படும் இருப்பை அகத்தில் வழிபட்டு கொண்டிருக்கிறேன் . நிழலற்ற ஒளி எங்கும் பரவ மெல்லியதொரு மவுனம் இரவாகிறது . இதோ பொழிகின்ற தூறலின் தொன்மை எந்த காலத்தின் நினைவுகள் . பிரபஞ்ச துருவங்கள் தொடர்ந்து சலனபடுத்த மித மிஞ்சிய உணர்தலை என்ன செய்வது பல அடுக்குகள் உள்ள உன் உருவகத்தில் எதனை பற்றியது