Posts

Showing posts from September 12, 2013

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

உயிரோசையில் வெளியான கவிதை அன்பின் நன்றி உயிரோசை நண்பர்களுக்கு . http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6349 ஒன்றிணைக்கும் அன்பில்   தன் வெளியின் ஓடம் எத்தனை தொன்மையினை கடந்து வந்திருக்கிறது கால நினைவில் இதனையும் இணைத்து விடு . நம் தனித்த விண்ணை அத்தனை உயிர்ப்புடன் நோக்குகிறேன் . அன்பு ஒரு பொருட்டல்ல விண் நிறைக்கும் உணர்தல் ஒவ்வொரு தனிமையிலும் வீற்றிருக்கிறது . விண்ணகி மேலும் காத்திரு அகாலம் தன் வினையை எப்பொழுதும் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது . ஒன்றிணைக்கும் அன்பில் மீண்டும் வந்திணை .   *** காலத்தின் இறுதியொன்று .  கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது . அதில் புதிர் நிறைந்த ஓர் நினைவை தேர்ந்தெடுத்தேன் . என்றோ கைவிடப்பட்ட நினைவு அது எவ்வித தயக்கமின்றி அனுமதித்தது அந்நினைவு அன்றிருந்த காலம் மீண்டும் உருப்பெறுகிறது . ஓர் நிமிடம் கடந்த நிலையில் வழியெங்கும் நிகழ்கால நினைவு தன்னை துரத்துகிறது . மீண்டும் அடையாளமிட்ட தன் நினைவை அங்கயே விட்டு வந்தடைந்தேன் மன்னிப்பாயாக.   *** தன்னின் மீண்டெழுதல் . அங்கொன்றும் நிகழ்