Posts

Showing posts from January 29, 2013

வளத்தூர் தி.ராஜேஷ் கவிதைகள்.

இந்த வார உயிரோசையில் வெளியான கவிதை http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6166 கூற்றின் நிகழ் மன நீர்மத்தின் அகழியில் சுழன்று கொண்டிருக்கிறது என் நினைவுகள் . என் பிரிதொரு முகம் அணிந்து உலவும் பல்நிலை வன்மம் காத்திருக்கும் இரவில் ஈடேற்ற   தன் மனதை உடைத்தெறிக்கிறது. இனி வன்மத்தின் முகம் அணிந்து எங்கும் திரிய வேண்டியது தான் . சுய தேடலின் விளைவுகளை முன்னிலைப்படுத்துகிறது தன் அறியாமை . பிரபஞ்ச நகர்வின் இடப்பெயர்வில் எதை தான் அறுதியிட்டு கூறி கொண்டிருக்க முடியும் . நிழல் கனவுகள் ஒளிர் புகும் வன்மம் நிறைந்த காலத்தின் நிழல் அச்சமூட்டுகிறது . தன் நிழல் வெளியிடும் விசையில் வீழ்ந்து கிடக்கிறது என் ஒளி . முன் இருப்பின் தொலைவில் நிகழின் பிம்பம் மேலும் கூச செய்கிறது . காத்திருப்பின் நிழல் பிம்பம் ஒருபோதும் நிர்பந்தங்களை எதிர்கொள்வதில்லை . என் பகிராத நிழலின் சொற்கள் காலத்தில் இறைந்து கிடக்கறது . தன் இரை தேடும் நிழலில் ஒளி வலி மிகுந்தது . அன்பின் நன்றி உயிரோசை ,நண்பர்களுக்கு .