விடை பெறுதல்
விடை பெறுவதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை அப்படி யாரும் இதுவரையில் இருந்திருக்கவில்லை . இப்பொழுது ஏன் விடை பெறுதல் அவசியமாகிறது என்றால் என்னிடமான சுயத்தின் மவுனம் தாங்கி கொள்ள முடியாமல் இருப்பதால் . அதன் கனமேற்றத்தின் அழுத்தங்கள் என்னை எப்பொழுதும் சோதித்து கொண்டிருப்பதால் . என்னை தன் நீர்மம் நிறைந்த பொருளாக மாற்ற முயல்வதால் . என்னை தன் மகிழ்வின் மீது அமர வைப்பதினால் விடை பெறுதல் மனதின் அனைத்துமான ஒன்றாக இருக்க வேண்டும் . அதன் நிலையிலே முதன் முதலாக தன் சுயத்தினை பார்க்க விடை பெறுதல் பெறுவதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை அப்படி யாரும் இதுவரையில் இருந்திருக்கவில்லை . -வளத்தூர் .தி.ராஜேஷ் .