Posts

Showing posts from September 18, 2011

பிரபஞ்ச ரகசியம் -திண்ணை,

திண்ணையில் வெளியாகும் எனது இருபத்தி ஐந்தாவது கவிதை நண்பர்கள் அனைவருக்கும் அன்பின் நன்றிகள் . http://puthu.thinnai.com/?p=4265 மனம்  தோன்றா  காலத்தில்  என்னிடம்  பறிக்கப்பட்டுவிட்டது  பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே  பரிணாமம்  அடைய  விட்டிருக்கிறது  காலம் . காண்கின்ற யாவற்றிலும்  ரகசியங்களாக  மாறுகிறது  சுய தேடல்கள் . இந்த உயிரின்  இறுதியும்  இவ்வாறே இருக்க  உலவ விட்டிருக்கிறது  அந்த ரகசியம் . இதன்  முறையே  பிறப்பிக்கப்பட்ட  ஒரு கட்டளை  உணர்வதற்குள்  ஒவ்வொரு செயலின்  அறியாமை  கடந்து விடுகிறது . பிரபஞ்ச எண்ணங்கள்  அனைத்துமே   உனதாக்கினேன்  அதுவே அகமகிழ்வு  என்றே வளர்ந்தேன்  உணர்ந்த பின்    உன்னில்  நான் இருப்பதை  என்னில்   கொண்டு வர  முடிவிலி கொண்டே  அனைத்தையும்  நோக்குகிறேன்  இதில் தவற விடப்படும்  பிரபஞ்ச  ரகசியம்  அனைத்தும்  நானாகிறேன் .       -வளத்தூர் தி.ராஜேஷ்