Posts

Showing posts from May 19, 2011

நோக்குகிறது .

உன் விலகல் தீர்மானத்தில் பழித்து கொண்டிருக்கிறது காலமும் நொடிகளும் . மீண்டும் கிடைக்க பெறாத உனக்காகவே உருவாக்கப்பட்ட  பேச்சுக்களும் ,பார்வையும்  புன்னகையும், கண்ணீரும்  தோன்றலின் இருப்பிடத்தில்  உன் முடிவில் சங்கமிக்கிறது . குற்றம் சுமத்த உனக்கான காரணங்கள்  எளிதில் கிடைத்து விடுகிறது  உன் விளையாட்டின் விபரிதம்  நானக்கப்பட்டேன் . வருத்தம் மிஞ்சும் தனிமையை  கிடைக்கபெற செய்த உன்னை  மறவேன் . உன் பொய்மையில் என் உண்மை  காணமல் போக செய்தாய்  பழிகளை நான் சுமக்கிறேன்  மாறாத அதே நேசிப்பில்  முதல் பார்வையும் முதல் ஆசையும்  பகிர செய்த அனைத்தும் இனி  இரண்டாம்பட்சம் தான் . என் வாழ்க்கை துணைவிக்கு  முதல் பிரியங்களை வழங்காமல்   செய்த உன் துரோகத்தின் பரிசு  இன்னும் அதிகப்படியான  சராசரி கணவனாக இருக்க  கண்ணீரால் உருவாக்கப்பட்டேன் . என் பரிசுத்த கண்ணீரில் என்னவளின்  அன்பை வளர்த்தேடுப்பேன் . உன் மீது குற்றம் சுமத்தி  விளக்கம் கேட்கும் நிலைமையில்  நானும் இல்லை என் ஆயாவும் இல்லை  அப்படி ஒரு நிலை இருந்திருந்தால்  என் வாழ்கை தீர்வின் முடிவு  என் ஆயாவின் காலடியிலே  மலர்ந்திருக்கும் . மனதின் பாரங்கள் அதிகமா