நோக்குகிறது .
உன் விலகல் தீர்மானத்தில்
பழித்து கொண்டிருக்கிறது
காலமும் நொடிகளும் .
மீண்டும் கிடைக்க பெறாத
உனக்காகவே உருவாக்கப்பட்ட
பேச்சுக்களும் ,பார்வையும்
புன்னகையும், கண்ணீரும்
தோன்றலின் இருப்பிடத்தில்
உன் முடிவில் சங்கமிக்கிறது .
குற்றம் சுமத்த உனக்கான காரணங்கள்
எளிதில் கிடைத்து விடுகிறது
உன் விளையாட்டின் விபரிதம்
நானக்கப்பட்டேன் .
வருத்தம் மிஞ்சும் தனிமையை
கிடைக்கபெற செய்த உன்னை
மறவேன் .
உன் பொய்மையில் என் உண்மை
காணமல் போக செய்தாய்
பழிகளை நான் சுமக்கிறேன்
மாறாத அதே நேசிப்பில்
முதல் பார்வையும் முதல் ஆசையும்
பகிர செய்த அனைத்தும் இனி
இரண்டாம்பட்சம் தான் .
என் வாழ்க்கை துணைவிக்கு
முதல் பிரியங்களை வழங்காமல்
செய்த உன் துரோகத்தின் பரிசு
இன்னும் அதிகப்படியான
சராசரி கணவனாக இருக்க
கண்ணீரால் உருவாக்கப்பட்டேன் .
என் பரிசுத்த கண்ணீரில் என்னவளின்
அன்பை வளர்த்தேடுப்பேன் .
உன் மீது குற்றம் சுமத்தி
விளக்கம் கேட்கும் நிலைமையில்
நானும் இல்லை என் ஆயாவும் இல்லை
அப்படி ஒரு நிலை இருந்திருந்தால்
என் வாழ்கை தீர்வின் முடிவு
என் ஆயாவின் காலடியிலே
மலர்ந்திருக்கும் .
மனதின் பாரங்கள் அதிகமாகிறது
பகிர கூடிய எண்ணத்தை
புரிந்து கொள்ளும் மவுனத்தை
என்னிடமிருந்து பிரித்து சென்ற
சுயமரியாதையை உன்
பொய்மை வடிவில் உன்னுடனே
வந்து விட்டன அவையாவது
விட்டு வை .
என் துணைவியை தேடுவதில்
பெற்றோர்களும் ,உறவினர்களும்
ஆவல் கொள்கின்றனர் .
எந்த பெற்றோரும்
நீ யாராவது விரும்புவதாக
இருந்தால் சொல் மனம் முடித்து தருகிறேன்
என்று ஒரு மகனிடம் கேட்பதில்லை
என் பெற்றோர்கள் கேட்டர்கள் என்னிடம்
மவுனமும் கண்ணீரும் பொய்மை சிரிப்பை
தவிர வேறு தோன்றவில்லை .
என்னவளின் எண்ணங்களை எப்படி
நேசப்பது என்று இப்பொழுதைய
திருச்சி வாழ்வு கற்று கொடுக்கிறது
உறவின் ஆளுமை விட்டு கொடுப்பதில்
மட்டுமல்லாமல் ஆயுள் முழுவதும்
நேசிப்பின் மாறா நிலையை உறுதி செய்யவும்
உணர செய்கிறது .
உன் வருகையை நான் மட்டுமல்ல
அன்பும் நோக்குகிறது .
- தி .ராஜேஷ் .
Comments
Post a Comment