நோக்குகிறது .

உன் விலகல் தீர்மானத்தில்
பழித்து கொண்டிருக்கிறது
காலமும் நொடிகளும் .
மீண்டும் கிடைக்க பெறாத
உனக்காகவே உருவாக்கப்பட்ட 
பேச்சுக்களும் ,பார்வையும் 
புன்னகையும், கண்ணீரும் 
தோன்றலின் இருப்பிடத்தில் 
உன் முடிவில் சங்கமிக்கிறது .

குற்றம் சுமத்த உனக்கான காரணங்கள் 
எளிதில் கிடைத்து விடுகிறது 
உன் விளையாட்டின் விபரிதம் 
நானக்கப்பட்டேன் .
வருத்தம் மிஞ்சும் தனிமையை 
கிடைக்கபெற செய்த உன்னை 
மறவேன் .

உன் பொய்மையில் என் உண்மை 
காணமல் போக செய்தாய் 
பழிகளை நான் சுமக்கிறேன் 
மாறாத அதே நேசிப்பில் 
முதல் பார்வையும் முதல் ஆசையும் 
பகிர செய்த அனைத்தும் இனி 
இரண்டாம்பட்சம் தான் .

என் வாழ்க்கை துணைவிக்கு 
முதல் பிரியங்களை வழங்காமல்  
செய்த உன் துரோகத்தின் பரிசு 
இன்னும் அதிகப்படியான 
சராசரி கணவனாக இருக்க 
கண்ணீரால் உருவாக்கப்பட்டேன் .
என் பரிசுத்த கண்ணீரில் என்னவளின் 
அன்பை வளர்த்தேடுப்பேன் .

உன் மீது குற்றம் சுமத்தி 
விளக்கம் கேட்கும் நிலைமையில் 
நானும் இல்லை என் ஆயாவும் இல்லை 
அப்படி ஒரு நிலை இருந்திருந்தால் 
என் வாழ்கை தீர்வின் முடிவு 
என் ஆயாவின் காலடியிலே 
மலர்ந்திருக்கும் .

மனதின் பாரங்கள் அதிகமாகிறது 
பகிர கூடிய எண்ணத்தை
புரிந்து கொள்ளும் மவுனத்தை 
என்னிடமிருந்து பிரித்து  சென்ற 
சுயமரியாதையை உன் 
பொய்மை வடிவில் உன்னுடனே 
வந்து விட்டன அவையாவது 
விட்டு வை .

என் துணைவியை தேடுவதில் 
பெற்றோர்களும் ,உறவினர்களும் 
ஆவல் கொள்கின்றனர் .
எந்த பெற்றோரும் 
நீ யாராவது விரும்புவதாக 
இருந்தால் சொல் மனம் முடித்து  தருகிறேன் 
என்று ஒரு மகனிடம் கேட்பதில்லை 
என் பெற்றோர்கள் கேட்டர்கள் என்னிடம் 
மவுனமும் கண்ணீரும் பொய்மை சிரிப்பை 
தவிர வேறு தோன்றவில்லை .

என்னவளின் எண்ணங்களை எப்படி 
நேசப்பது என்று இப்பொழுதைய 
திருச்சி வாழ்வு கற்று கொடுக்கிறது 
உறவின் ஆளுமை விட்டு கொடுப்பதில் 
மட்டுமல்லாமல் ஆயுள் முழுவதும் 
நேசிப்பின் மாறா நிலையை உறுதி செய்யவும் 
உணர செய்கிறது .

உன் வருகையை நான் மட்டுமல்ல 
அன்பும் நோக்குகிறது .

                                  - தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை