உன் அகாலத்தில் எங்கள் அருவும் கொண்டு உயிர்த்திருந்தாய். உன் இருப்பின் அமைவு இன்றியும் உணர்ந்து கொண்டிருக்கிறோம் கரு இழந்த பிரபஞ்சத்தில் . விண்ணகி விண்ணகன் என்று முடிவிலியாய் ஓலமிடுகிறது நம் மனம் . நம் கண்ணீரை ஏந்தி கொள்ள காலம் போதாது தான் . இதனை மீறியும் ஏற்றுக்கொள்ள எங்களிடம் ஏதுமில்லை . கைவிடப்பட்ட உயிர் கரு அகாலம் கொண்டு நம்மை உயிர் கொண்டிருக்கிறது . நம் பிரபஞ்ச அகாலத்தில் உன் அருவம் அதன் அன்பும், நினைவும் முடிவிலியாய் என்னென்றும் நிலைத்திருக்கும் . நம் இழப்பின் வழியே உயிர்த்தெழும் காலம் . சென்று வா விண்ணகி /விண்ணகன் உன் மரணத்தில் மீண்டும் பிரபஞ்ச கரு உயிர்தெழும் . தி.ராஜேஷ் ,மகாலட்சுமி