Posts

Showing posts from May 9, 2011

அதனதன் தனிமைகள் -வளத்தூர் தி .ராஜேஷ்

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை  அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கும். Sunday May 8, 2011 அதனதன் தனிமைகள் வளத்தூர் தி .ராஜேஷ் சீற்றமிகு தனிமையின் விளைவை தன் மவுனத்தில் வெளிவருவதை என் அழுகை காட்டி கொடுத்து விடுகிறது . பரிமாணத்தின் பரிசுத்த அக்கண்ணீர் இக்கணம் திரவத்தின் தலைவன் ஆனது. அக்கண்ணீர் தன் இயக்கத்தின் வீற்றிருக்கும் தன்மை அளப்பரியது . அழுகை நேர்கின்ற நிகழ்வை மனதை வெற்றிடத்தின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் வாயிலில் நின்று வரவேற்பை நிகழ்த்துகிறது சூழ்நிலையும் தன் வெறுப்பு நிலையையும் . கூடுமானவரை இதை உங்களாலும் தவிர்க்க முடியாதது காலத்தின் குற்றமல்ல உயிரினங்களின் அறியாமையே காரணமாக்கப்படும் . அதில் இப்பொழுது முதன்மையானது நானும் அதன் கண்ணீரும் அதனதன் தனிமைகளும் தான் .                 -வளத்தூர் தி .ராஜேஷ் . http://www.thinnai.com/?module=displaystory&story_id=311050817&format=html

வார்த்தையின் சற்று முன் நிலை .

Image
இதுவரையிலும் உனக்கு  சொல்லப்படாத வார்தையை  என் மனதில் தேடிகொண்டிருக்கிறேன்  அவை உனக்கு பல ரகசியங்களை  சொல்ல கூடும் சற்று சந்தேகி . சில பொய்மையும் அதன் கண்ணீரும்  வடிந்தோடி கொண்டிருக்கும்  அதில் சற்று மூழ்கி எழுந்து விடு . அவைகளை ஒரு சொல்லாகவே  நீ எதிர்கொள்ளவில்லை என்பதை  சற்று நிம்மதி அளிக்கிறது . வாழ்வியலின் அடிப்படை பதிவிறக்கம் போல  உனக்கு சொல்லப்பட்டதை தகர்க்க செய்யும்  வார்த்தையாய் அவைகளை மேலும்  நம்பிக்கையாக்குகிறாய் . கூடுமானவரை அந்த வார்தைகளை  எந்த கணத்தில் உருவானதோ அதே நிலையில்  அதே உயிர்ப்பில் உன்னிடமே வந்து சேர்க்கும்  என் கட்டமைப்பின் மனதின் விதையில் விதைக்கப்படுகிறது ,சொல்லப்பட்டிருக்கிறது. இது வெறும் செய்தி மட்டுமல்ல உயிரின் பகிர்வு . அன்பின் எண்ணங்களும் அதன் செயலும்  வீற்றுக்கும் பிரதிபலிப்பை உன் இயல்பில்  இருப்பதை உன் மவுனமும் புன்னகையும்  சற்று காட்டி கொடுப்பதில் அந்த வார்தையின்  பிரபஞ்ச பூரணத்துவமாய் முனைப்பாகிறது . இனி வார்தைகளை வெறும் சொற்களால் ஆவதை  சற்றும் உன்னால்  பொருத்து கொள்ள முடியாது .                                                                 - தி .