அதனதன் தனிமைகள் -வளத்தூர் தி .ராஜேஷ்


இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை 

அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கும்.

Sunday May 8, 2011

அதனதன் தனிமைகள்



வளத்தூர் தி .ராஜேஷ்



சீற்றமிகு தனிமையின்
விளைவை
தன் மவுனத்தில்
வெளிவருவதை
என் அழுகை
காட்டி கொடுத்து விடுகிறது .
பரிமாணத்தின்
பரிசுத்த அக்கண்ணீர்
இக்கணம்
திரவத்தின் தலைவன் ஆனது.
அக்கண்ணீர் தன் இயக்கத்தின்
வீற்றிருக்கும் தன்மை
அளப்பரியது .

அழுகை நேர்கின்ற நிகழ்வை
மனதை வெற்றிடத்தின்
உச்சத்திற்கு அழைத்து
செல்லும் வாயிலில் நின்று
வரவேற்பை நிகழ்த்துகிறது
சூழ்நிலையும்
தன் வெறுப்பு நிலையையும் .

கூடுமானவரை இதை உங்களாலும்
தவிர்க்க முடியாதது
காலத்தின் குற்றமல்ல
உயிரினங்களின் அறியாமையே
காரணமாக்கப்படும் .
அதில் இப்பொழுது முதன்மையானது
நானும் அதன் கண்ணீரும்
அதனதன் தனிமைகளும் தான் .
                -வளத்தூர் தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை