Posts

Showing posts from March 13, 2013

மகா இயக்கத்தின் சிறு நினைவு சிதறல்கள்.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான எனது முப்பத்தி ஆறாம் கவிதை.  http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6196 தன் இயக்க சுழலில்   எத்தனை விதமாக   மறுதலித்து கொண்டிருக்கிறது ஒப்பற்ற மனம் .   எதிலும் தன் அடக்குமுறையில்   மவுன சிறகுகளை   முறித்து கொண்டிருந்தேன்   உணர்தலின் வலி   பெருவெளி எங்கும்   நிறைந்து கொண்டிருக்கிறது . இதில்   தன் நுண்ணிய பகிர்வு   எண்ணுதலை விட   மிகு நுண்ணிய தன்மை கொண்டது . அதில்   ஓர் மவுன இடைவெளியை   பிரபஞ்ச அலையின்   இயக்கமாய்   மவுன சிறகுகளை   விடுவிக்க முயல்கிறது .   சில அனுமானத்தின் நிழலில்   இரவை உற்றுநோக்கி கொண்டிருக்க   அசைவுறும் பிரபஞ்ச நிழல் தன்னின் பிரதிபலிப்பை   எங்கு கொண்டு சேகரித்து கொண்டிருக்கிறது . இங்கு   பெற்றுக்கொண்டவையில்   தொன்மையின் ஒளிர் சிதற   தன் பிம்பம் எதன் எதிரொளி . மேலும் காத்திரு   அகாலம்   தன் வினையை என்னென்றும் உற்பத்தி   செய்து கொண்டிருக்கும் . ------ தன்   நினைவுகள் உன் காலத்தின் முடிவிலியில் தொடங்குகிறது . நினைவாய் உன் புன்னகையில் எஞ்சி இருப்பதை சேகரித்து கொண்டிருக்கிறேன் நம் பிரபஞ்ச எதிர் காலத்திற்காக .   உன்