Posts

Showing posts from January 27, 2013

இளம் படைப்பாளி கவிதைகள் வளத்தூர்தி.ராஜேஷ்

 அக்டோபர் மாதம் மலைகள் இதழில் வெளியான என் முதல் கவிதை. http://malaigal.com/?p=869 உருவாகியிராத திசையின் தென்றல் தீண்ட உருவாகிறது என் மனதின் அசைவுகள். அதில் என் நொதிகள் சரிய உன் அமைவை ரசிக்கிறாய் .   அண்டமெங்கும் ஒலிக்கின்ற மன ஒலியை என் எதிரொலியாக மாற்றுகிறாய் .   என் இல்லாமையின் இருப்பை மட்டுமே கூறிக்கொண்டிருக்கிறேன் சுயத்தின் புலம்பல்கள் ஆதியின் மவுனத்தில் சரண் புகும் .   தன் உணர்தலின் தொன்மையின் படிமங்கள் பிரபஞ்ச நிழலில் ஒளிர்கிறது கனவுகளாக .  நண்பர் ராம் சின்னப்பயல் அவர்களுக்கு நன்றி . அன்பின் நன்றி மலைகள் ,நண்பர்களுக்கு ..