இளம் படைப்பாளி கவிதைகள் வளத்தூர்தி.ராஜேஷ்
அக்டோபர் மாதம் மலைகள் இதழில் வெளியான என் முதல் கவிதை.
http://malaigal.com/?p=869
உருவாகியிராத திசையின் தென்றல் தீண்ட
உருவாகிறது என் மனதின் அசைவுகள்.
அதில் என் நொதிகள் சரிய
உன் அமைவை ரசிக்கிறாய் .
அண்டமெங்கும் ஒலிக்கின்ற
மன ஒலியை
என் எதிரொலியாக மாற்றுகிறாய் .
என் இல்லாமையின் இருப்பை மட்டுமே
கூறிக்கொண்டிருக்கிறேன்
சுயத்தின் புலம்பல்கள்
ஆதியின் மவுனத்தில் சரண் புகும் .
தன் உணர்தலின்
தொன்மையின் படிமங்கள்
பிரபஞ்ச நிழலில்
ஒளிர்கிறது கனவுகளாக .
நண்பர் ராம் சின்னப்பயல் அவர்களுக்கு நன்றி .
அன்பின் நன்றி மலைகள் ,நண்பர்களுக்கு ..
Comments
Post a Comment