Posts

Showing posts from January 16, 2011

ஒரு அன்பு

ஒரு அன்பு  அவ்வளவு  எளிதாக  உணரகூடியதல்ல  அதன் மகத்துவம்  புரிவதற்கு  முன்பு  அதன்  புத்துணர்ச்சியை  உடேன  நாம் பெறுவதே  அந்த  அன்பினை  பெறுவதற்கு   நாம் தகுதி  உடையவர்களாகிறோம் . அன்பு  அளப்பரிய  பல புரிதல் உள்ளடக்கியது   அது எங்கும்  வியாபித்திருக்கும்  பிரபஞ்சம்  இங்கு இப்படி தான்  இருக்க வேண்டும்  என்ற  பிறப்பிக்கப்பட்ட  கட்டளை ஏதும் இதில் இருக்க  போவதில்லை .. பிரிந்த அன்பு   நெருங்கும்  அன்பு   என்று எந்த  அளவுகோலும்  இதில் வரையறுக்கவில்லை  என்  வருங்கால  துணைவிக்கு  எந்த அளவிற்கு  தகுதியாக இருக்க  போகிறேன் என்ற  கேள்வி எழவே வாய்பிருக்க கூடாது .. அவ்விதமான அன்பை  நன் வழங்கும்  பொழுதோ  பெரும் பொழுதும் உள்ளத்தில்    எந்த களங்கமும்   இன்றி இருக்க  அன்பு தன்னை  மாற்றியமைக்க  வேண்டியதில்லை  அது ஒரு  அன்பாக இருந்தாலே  போதுமானது ..                   தி .ராஜேஷ் .    

கடினம்

இப்பொழுதெல்லாம்  அதிகமாகவே  அழுது விடுகிறேன் உணர்வின்  அதிக  பலவீனம்  ஆட்கொள்ள  எதுவுமே  செய்ய முடியாமல்  அழுவதே சிறந்ததாக  இருப்பதால் அழுவது  புதினமாகவே  அமைகிறது   எனக்கு.  அவ்வளவு  துக்ககரமானதல்ல என் அழுகை  அன்பின் நிலையை  அது உரைப்பதாகவே  எனக்கு காட்டுகிறது .. ஆயாவின் பிரிவை  எப்படியெல்லாம்  மாற்றியமைக்க  விரும்பினேனோ  அவை முதல் நிலையிலே  தங்கி விட்டன  நான் விரும்பவதும்  அவையே .. மகிழ்வுகள்  எப்பொழுதும்  சூழ்ந்திருந்தாலும்  கடினமான  மன நிலையிலே  இருப்பதேன்  நண்பர்களின்  அக்கறை  தொலைபேசியில்  என் அறையை  தட்டி சொன்னார்கள் ... கடினம் மிகவும்  ஆபாயங்கரமான  சொல்லாகவே  அவர்களால் அதை பார்க்கப்பட்டன  கடினமாக அதை  உணர தேவை இல்லை  இதிலாவது  உதாரணமாக  இருந்து விட்டு  போகிறேனே  என்று சொல்ல தான்  விரும்பினேன்..                     - தி .ராஜேஷ் .