Posts

Showing posts from January 26, 2011

அடங்கி இருக்கிறது.

Image
யாதுமற்ற ஒரு கருத்தை  நேசிக்கிறேன்  அதில் உள்ள  அழகியலை  வர்ணிக்கிறேன் உங்கள் கற்பனையும்  இதில் அடங்கி இருக்கிறது .. புறக்கணிக்கும் அனைத்தும்  இங்கே தஞ்சமடைகிறது அவமதிப்பின் ஆற்றலை  இங்கு காண்பீர்கள்  உங்கள் ஆற்றாமையும்  இதில் அடங்கி இருக்கிறது .. உணர்த்த சிந்தனையை  இப்பொழுது புகழ்கிறீர் சிறுதும் குற்றஉணர்வுயின்றி  உங்கள் பொய்மையும்  இதில் அடங்கி இருக்கிறது .. ஒரு சூல்நிலையாக்கம்  உங்களில் நுழைந்து விடில்  மீண்டு விடுதல்  மற்றுமொரு வழியில்  உங்கள் கவனம்  சிதறடிக்கப்படுகிறது  உங்கள் சுயமும்  இதில் அடங்கி இருக்கலாம் .                                               - தி .ராஜேஷ் . .

அடங்கி இருக்கிறது

யாதுமற்ற ஒரு கருத்தை  நேசிக்கிறேன்  அதில் உள்ள  அழகியலை  வர்ணிக்கிறேன் உங்கள் கற்பனையும்  இதில் அடங்கி இருக்கிறது .. புறக்கணிக்கும் அனைத்தும்  இங்கே தஞ்சமடைகிறது அவமதிப்பின் ஆற்றலை  இங்கு காண்பீர்கள்  உங்கள் ஆற்றாமையும்  இதில் அடங்கி இருக்கிறது .. உணர்த்த சிந்தனையை  இப்பொழுது புகழ்கிறீர் சிறுதும் குற்றஉணர்வுயின்றி  உங்கள் பொய்மையும்  இதில் அடங்கி இருக்கிறது .. ஒரு சூல்நிலையாக்கம்  உங்களில் நுழைந்து விடில்  மீண்டு விடுதல்  மற்றுமொரு வழியில்  உங்கள் கவனம்  சிதறடிக்கப்படுகிறது  உங்கள் சுயமும்  இதில் அடங்கி இருக்கலாம் .                                               - தி .ராஜேஷ் . .

மீண்டுவிடுதல்

ஈடில்லா ஒரு  கனமேற்றும் செயல்பாடு  உங்களை தழுவி  சென்றதை   உணருகிறிர்கள். இப்பொழுது  நீங்கள் உடனே   செய்யவேண்டியவை  அந்த கணத்தில் இருந்து  மீண்டுவிடுவதே .. அது எப்படிப்பட்டவை  என்று உங்களுக்கு  இறுதி வரை  சொல்லி முடிக்கவில்லை  கேட்கும் நிலையை  கடந்து விட்டு  அதிலே  பயணப்பட்டுவிட்டர்கள் .. மீண்டுவிடுதல் மற்றுமொரு   செயலாக உருவாக்கி கொண்டாலும்  தோன்றலின் இருப்பாய்  அந்த கனத்தை பற்றியே  சுற்றியம்மைக்கப்படுகிறது . நிகழ்ந்த இருப்பிடம்  செல்வதை காட்டிலும்  நிகழ்த்துகின்ற பிணைப்பை  ஏற்கின்றாய் .. ஒரு பொழுதும்  தவறின் நிழல்  இதில் விழாதவாறு  மீண்டுவிடுவதே  உண்மையாக்குகிறாய் .                                  -தி .ராஜேஷ் .

அன்பின் தருணம்

வருடும் மெல்லிய  காற்றின் அசைவு  உன்னை நினைவாக்கி  கொள்ள  இன்றும் உன்னை  காணமல்  உணரமட்டுமே  செய்கிறேன் .. இன்றைய நாளை  என்னை போல  நீயும்  கடந்து இருப்பாயா அதில் நானும்  உன்னுடன்  பயணித்தேனோ.. நமக்குள்  அறிமுகம்  இல்லையென்றாலும் யாரென்று  தெரியாமல்  இருந்தாலும்  உணர்கிறேன்  உன்னை முழுமையாக .. கடந்ததை நிகழாமல்   இருக்கவே அன்பை  பெறுவதற்கும்  வழங்குவதற்கும்  பகிர்வு  சேமிக்கப்படுகிறது. நம்  வாழ்வை எப்படியெல்லாம்  அமைக்க கற்பனைகள்  கணக்கில்லா நிலையை  எப்பொழுதோ  அடைந்து விட்டன. நீ சேர்த்து வைத்த நினைவுக்கும்  நிகழ்வை  எற்ப்படுத்துவோம்  நம் அன்பை. வருகின்ற நிலையை  சொல்லாமலே  என்னுள் கலந்துவிடு  காத்திருப்பிற்கு நீ  தரும் நினைவு  பொக்கிஷமாகவே நிலைத்திருக்கும்  நம் நேசங்களில் .                 - தி .ராஜேஷ் .