Posts

Showing posts from May 29, 2011

தனிமை

Image
இப்பொழுதைய இந்த  தனிமை நிமிடங்களை  எச்சரிக்கை மிகுந்த   தருணமாக மாற்றியமைக்கிறது  காலம் . தனித்திருப்பது ஒன்றும்  அபாயகரமானது அல்ல  அதன் சிந்தனை முறையை  அதனதன்  முறையே  நிகழ செய்யும் ஒன்றை  எப்பொழுதும்  செய்யவிட்டதில்லை  காலம் . சுயங்கள் பின்னப்பட்டிருக்கும்  முடிச்சுகளை தனிமையின்  ஏதோ ஒரு நொடிகளும்  அதன் காலமும்  விடுவிக்க காத்திருக்கிறது . நொடிகளின் இடப்பெயர்வு  நினைவலைகளை  சிதறடிக்கிறது . அதன் பிம்பங்கள்  அச்சம் தரும் விதமாக  சிரிக்கிறது . தனிமை அதன் மவுனத்தின்  உட்புகுதலில்  கூக்குரலிடுகிறது . காற்றின் இடப்பெயர்ச்சிக்கு  இங்கு வேலையில்லை .                                -வளத்தூர் தி .ராஜேஷ் .

எதற்கும் நீ விலகி இரு உன்னிடமே .

Image
எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . இதுவரையிலும் முழுமையாக  நீ புரிந்து கொண்ட  உறவு உருவாகியிருக்கவில்லை . எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . உன்னை புரிந்து கொள்கின்ற  உறவும் இது வரையிலும்  நம்பிக்கையாகவில்லை . எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . தன் முன்னோர்களை எளிதாக  பழியை சுமத்த உன் வழிகளை  எளிமைப்படுத்தி இருக்கிறார்கள் . எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . உன் குற்றங்களுக்கான  தண்டனை ஒரு போதும்  நீ பெற்றிருக்கவில்லை . எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . உன் சுயங்களை நீ  இதுவரையிலும்  அறியவும் இல்லை  இருப்பதை  ஒத்து கொண்டதும் இல்லை . எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . உன்னை பற்றிய  பிம்பம் தோன்றாத கனவில்  நீ இருப்பதை ஒரு போதும்  ஏற்றுக்கொண்டது இல்லை  எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . உன்னை பழிக்கும் பொய்மையை  வளர்த்தெடுக்கவே  தன் உண்மைகளை  மாய்த்து விடுகிறாய்  வெட்கமின்றி . எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . பரிணமிக்கும் தனிமையை  நீ தொகுப்புகளாக சேர்த்து  கொள்வதென்பது  வாழ்வியலின் இயக்கத்தை  பெற்று இருக்கிறாய் . எதற்கும் நீ விலகி இரு  உன்னிடமே . எதையும் குறிப்பிட ஒன்றும்