Posts

Showing posts from March 9, 2011

கூடுமானவரை

Image
மனதிற்கு ஈடு செய்யகூடிய தனிமையை  உன் நினைவுகளில் அலங்கரிக்கும் நாட்களாக மாற்றுகின்றாய் . இரவென்றும் பாராமல்  நம் தவிப்பின்  நோக்குதல் நன்னெறியாகிறது. கூடுமானவரை கற்பனை எது நிஜம் எதுவென  அறிய ஒரு அடையாளமாவது தந்து விட்டு போ . இதை போலவே நீயும் ஆவல் கொள்வாயா  கவலை கொள்ளாதே நீ என்னை நெருங்கி வருகிறாய் இனி என் வெற்றிடத்தின் விசை பரவும்  மெய் தீண்டும் தூண்டலை  உனதாக்குகிறாய்.                                                            - தி .ராஜேஷ் .