கூடுமானவரை



மனதிற்கு ஈடு செய்யகூடிய தனிமையை 
உன் நினைவுகளில் அலங்கரிக்கும்
நாட்களாக மாற்றுகின்றாய் .
இரவென்றும் பாராமல் 
நம் தவிப்பின்  நோக்குதல் நன்னெறியாகிறது.
கூடுமானவரை கற்பனை எது நிஜம் எதுவென 
அறிய ஒரு அடையாளமாவது தந்து விட்டு போ .
இதை போலவே நீயும் ஆவல் கொள்வாயா 
கவலை கொள்ளாதே நீ என்னை நெருங்கி வருகிறாய்
இனி என் வெற்றிடத்தின் விசை பரவும் 
மெய் தீண்டும் தூண்டலை  உனதாக்குகிறாய். 
                                                          - தி .ராஜேஷ் .


  

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு