Posts

Showing posts from September 14, 2011

மாலை சூட-திண்ணை

இந்த வராம் திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=4108 ஒளிகளாய் நிரம்பியுள்ளது  எந்தன் அறைகள் சிந்தனை சிதறல்களில் . மேலும் மேலும் ஒளி பெறுகிறது உந்தன் வருகையை நோக்கி . வாசல்களில் என் மனதின் மிச்சத்தை உளவு வைத்தேன் அவை சிறு சிறு ஒலிகளாக கோர்க்கப்படுகிறது மாலை சூட. நெருங்குதலில் தயக்கம் கூடுகிறது தவிப்புகள் அனைத்தும் மவுனமாகியது நம்மின் புரிதலில் . என்று ஆட்கொண்டேன் உன் சுகமானநினைவுகளை . நினைத்து பார்கையில் பல நிலைகளில் உன் பாதிப்புகளின் மிச்சம் எராளமாக நிறைந்துள்ளது . நான் அதை அகற்றமுற்படும் பொழுதுஎல்லாம் இன்னும் அதிகமானவிளைவுகளை என் நினைவலைகளில்  ஏற்பட வைக்கிறாய் . நான் மிக்க நெருங்கி உன் நினைவுகளை நேரெதிர் பார்க்கும்பொழுது அங்கே கண்டது  என் ஆசைகளின் பிரதிபலிப்பு மட்டுமே. நான் விருப்பம்கொண்டது எல்லாம் உன் செயல்களின் நினைவாக என்னை சேர்கிறது. அரவணைப்பில் காத்திருக்கும் நேசங்களில் நொடிகளாய் நீள்கிறது உன் பரிதவிப்புகள் . காலம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கத்தில் உறைந்து போகிறது நம் புரிதல் மவுனங்களில். நீடித்து இருக்கும் நம் தன்மைகளை வெறும் வார்தை