Posts

Showing posts from February 22, 2011

மெய்யாகும் சூழ்.

Image
வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே  நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம்  செய்யப்பட்டு வந்திருக்கிறது  உனது எனது பேதமில்லை  ஒன்றிலிருந்து ஒன்றாக  ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும்  நிர்பந்தங்கள் எப்பொழுது அவிழ கூடும் . காண்கின்ற எல்லாவற்றிலும்  கேள்விகளும் பதில்களும்  இவையாகவே தொற்றி  கொண்டிருக்கிறது . இது வரை தோன்றிடாத எண்ணங்களில்  அடங்கி இருப்பவையாக கருதப்படும்  அதன் இயக்கங்கள் யாவற்றிலும்  நம் இப்பொழுதைய சிந்தனைகள் கொஞ்சமேனும்  அடித்தளமிட்டு பரிகாசித்து கொண்டிருக்கும் . கூற்றின் அறம் பொய்க்குமாயின் தவறின் கொள்கைகள் நியாயப்படுத்த  காரணங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது  சூழ்ந்து இருக்கும் நிலை கூட அவ்வாறே  தோற்றமளித்து கொண்டிருக்கிறது  இன்றளவும் . செய்து கொண்டிருப்பவை அனைத்தும்  அகத்தின் மெய்யை உரமேற்று கொண்டிருப்பவை  ஒளிகளின் பார்வையை அதன் நிழல் கொண்டு  வழிப்பட்டு வந்தவை ஒளியாகவே உணரும்  காலத்தின் சூழ் மெய்யாகும் .                                    -தி .ராஜேஷ்