Posts

Showing posts from March 6, 2011

நாமாவோம்

Image
தீண்டப்படாத எந்த நினைவையும்  விட்டு வைக்கவில்லை இனி  தவிப்புகளை புரிந்து கொள்கின்ற  ஒரே மொழி நம் மவுனம் மட்டுமே . அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகள்  தினமும் வந்து சேர்ந்து விடுகிறது ஒன்றுபடும் நம் நேசத்தில்   என் தவறுகளும் பொய்மையும்  உன்னிடம் மேன்மையடையக்கூடும் . என் வரையறையில் உன்னை  காண்பது விட உன் வரைமுறையில்  நம் வாழ்வை காண்போம்  கற்பனையில் சொல்வதாக  எண்ணி விட கூடும் ஆதலால்  நூற்றில் நானோவின்  ஒரு  பகுதியை எழுதி விடுகிறேன்  மன்னிப்பாயாக . நம் தேடல்கள் இனி நாமாவோம்  பெருகி கொள்கின்ற விருப்பம்  பொருந்தும்  மனமாகும். இன்று வரை நீ யாரென்று  தெரியவில்லை நாளை வரை  காத்திருக்க வைக்க வேண்டுமா  முதல் முறையாக நியாயப்படுத்தி கொள்கிறது பல நிலைகளுடைய  தன் விருப்பங்கள் .                            -தி .ராஜேஷ்