நாமாவோம்







தீண்டப்படாத எந்த நினைவையும் 
விட்டு வைக்கவில்லை இனி 
தவிப்புகளை புரிந்து கொள்கின்ற 
ஒரே மொழி நம் மவுனம் மட்டுமே .

அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகள் 
தினமும் வந்து சேர்ந்து விடுகிறது
ஒன்றுபடும் நம் நேசத்தில்  
என் தவறுகளும் பொய்மையும் 
உன்னிடம் மேன்மையடையக்கூடும் .

என் வரையறையில் உன்னை 
காண்பது விட உன் வரைமுறையில் 
நம் வாழ்வை காண்போம் 
கற்பனையில் சொல்வதாக 
எண்ணி விட கூடும் ஆதலால் 
நூற்றில் நானோவின்  ஒரு 
பகுதியை எழுதி விடுகிறேன் 
மன்னிப்பாயாக .

நம் தேடல்கள் இனி நாமாவோம் 
பெருகி கொள்கின்ற விருப்பம் 
பொருந்தும்  மனமாகும்.

இன்று வரை நீ யாரென்று 
தெரியவில்லை நாளை வரை 
காத்திருக்க வைக்க வேண்டுமா 
முதல் முறையாக நியாயப்படுத்தி
கொள்கிறது பல நிலைகளுடைய 
தன் விருப்பங்கள் .

                           -தி .ராஜேஷ் 




Comments

  1. So, finally u started dreaming about your girl...
    Good, i will talk about this to mama, mami & Karthi..

    ReplyDelete
  2. Yes anni :)idhu kandippa vetkam than ..
    anni balaji miss that :):) ithu kandippa kindal than.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு