நாமாவோம்
தீண்டப்படாத எந்த நினைவையும்
விட்டு வைக்கவில்லை இனி
தவிப்புகளை புரிந்து கொள்கின்ற
ஒரே மொழி நம் மவுனம் மட்டுமே .
அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகள்
தினமும் வந்து சேர்ந்து விடுகிறது
ஒன்றுபடும் நம் நேசத்தில்
என் தவறுகளும் பொய்மையும்
உன்னிடம் மேன்மையடையக்கூடும் .
என் வரையறையில் உன்னை
காண்பது விட உன் வரைமுறையில்
நம் வாழ்வை காண்போம்
கற்பனையில் சொல்வதாக
எண்ணி விட கூடும் ஆதலால்
நூற்றில் நானோவின் ஒரு
பகுதியை எழுதி விடுகிறேன்
மன்னிப்பாயாக .
நம் தேடல்கள் இனி நாமாவோம்
பெருகி கொள்கின்ற விருப்பம்
பொருந்தும் மனமாகும்.
இன்று வரை நீ யாரென்று
தெரியவில்லை நாளை வரை
காத்திருக்க வைக்க வேண்டுமா
முதல் முறையாக நியாயப்படுத்தி
கொள்கிறது பல நிலைகளுடைய
தன் விருப்பங்கள் .
-தி .ராஜேஷ்
So, finally u started dreaming about your girl...
ReplyDeleteGood, i will talk about this to mama, mami & Karthi..
Yes anni :)idhu kandippa vetkam than ..
ReplyDeleteanni balaji miss that :):) ithu kandippa kindal than.