Posts

Showing posts from January 1, 2011

பொய்மையின் மொழிபெயர்ப்பு

என் எண்ணங்களின் தவிப்புகளை வரையறை செய்ய இயலாமையில் என் நிமிடங்கள் தனிமைக்கு அழைத்து செல்கிறது ... தோன்றும் மருத்தொன்றலின் சிந்தனையை வழிப்பறி செய்கிறது உன் நினைவுகள் .... மறுக்கும் உண்மையின் மொழிபெயர்ப்புகளை பொய்மையை நாடுகிறது ... நடக்கும் நிகழ்வுகளை இயல்பாய் ஏற்று கொண்ட என் மனம் ... என்றுமே தொடரபோவது உன் அன்பு நிலையையே ..                              - தி.ராஜேஷ்

ஒரு இலையுதிர் காலம்

ஒரு  இலையுதிர் காலம்  நிழல் தருவதாக  கருத வாய்ப்புண்டு ...  இலைகள் அனைத்தும்  உதிர்ந்த பின்னும்  இன்னும் இருக்கின்ற  மிச்சத்தில் கிளைகளை  மட்டுமே எதிர்நோக்குகிறேன் .. கிளைகளின் உடையில்  கூட அதன் நிழல்  அழகு குறைவில்லா  நிலையே எட்டுகிறது ... பழையன கழிதலில் புதியன கூட  சேர்ந்து விடுகிறது  சில நேரங்களில் .. நிழல் கிடைக்கவிட்டாலும்  அவை இருப்பதாக  கருத வாய்ப்புண்டு . எனக்கு .                   -தி.ராஜேஷ் .