ஒரு இலையுதிர் காலம்

ஒரு  இலையுதிர் காலம் 
நிழல் தருவதாக 
கருத வாய்ப்புண்டு ... 

இலைகள் அனைத்தும் 
உதிர்ந்த பின்னும் 
இன்னும் இருக்கின்ற 
மிச்சத்தில் கிளைகளை 
மட்டுமே எதிர்நோக்குகிறேன் ..


கிளைகளின் உடையில் 
கூட அதன் நிழல் 
அழகு குறைவில்லா 
நிலையே எட்டுகிறது ...

பழையன கழிதலில்
புதியன கூட 
சேர்ந்து விடுகிறது 
சில நேரங்களில் ..

நிழல் கிடைக்கவிட்டாலும் 
அவை இருப்பதாக 
கருத வாய்ப்புண்டு .
எனக்கு .
                  -தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை