Posts

Showing posts from February 27, 2013

வளத்தூர் தி.ராஜேஷ் கவிதைகள்.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6184 தன் ஒளி ஏற்றுக்கொள்ளப்பட்ட இருளில் இன்னும் எதனை அனுமதிக்கப்படும். அடுத்தடுத்த தன் இருப்பை வழங்கி கொண்டிருக்கும் நிழலில் தன்  ஒளி கவனச்சிதறலாக ஆக்கப்படுகிறது . தொன்மையின் ஒளி என்னை சேர்வதற்கு உள்ளாகவே காட்சிப்படுத்தி விடுகிறது தன் உணர்தலின் இருப்பை . முன்னிறுத்தும் இருப்பின் நிழல் பெரு வெளியின் கனவாய் நகர்கிறது . குன்றிய இறுமாப்பின் நிழல் ஆதியின் ஒளியில் தன் இயல்பை மறைத்து கொண்டு மேலும் பிரதிபலித்து கொண்டிருக்கிறது . தன் ஒளியின் விடுவிப்பை மேலும் அதிகரித்து கொண்டிருக்கிறாய் . ஈடற்ற நிழல் நகர்ந்து கொண்டிருக்கையில் வழியெங்கும் தன் பிரதிபலிப்பு தான் . தன் பகிர்வு எதனை பற்றியதாக இருந்தாலும் அவைகள் உன் மையத்தின் வெளி சிதறல் தான் . தன் ஒளி அத்தனைக்கும் அதனதன் நிழலாய் நான் . ---------------------------------------------------------------------------   பகிர்வின் எல்லை நாளை வெறொரு இருப்பின் வழியே அனைத்தும் மாற்றி அமைக்கப்படும் நிலையிலும் இங்கு அனுமானத்தின் மீ