தன்னின் சில நொடிகள்
தன் மவுனம் கால இடைவெளி இன்றி ஒலித்து கொண்டிருக்கிறது. அதனை கேட்பதற்கு சில நுணுக்கங்களை விதைத்திருக்கிறது மவுனத்தின் ஆதி. தன் இருப்பின் அமைவு ஒவ்வொன்றாக பரிணாமம் அடைந்து கொண்டிருக்கிறது . உன் சிறு சிறு மாறுதல்களில் மாறுகிறேன் மாற்றங்களாய் . தன் வெளியின் முடிவிலிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது காலம் . -வளத்தூர் தி .ராஜேஷ்