நம்பிக்கையாகாது .
வீறுகொண்டு எழ இன்னுமும் கீழே விழுவதற்கு வழி வகை இல்லாமல் இருக்க சிந்தனையை கூர்மையாக்குகிறேன் .. அதை கொண்டு உருவாக்கிய என் ரணத்தின் கோடுகள் உங்களால் பார்க்க இயலாமல் மறைக்கப்பட்டுள்ளது . இப்பொழுது இதை தெரிந்து வைத்திருப்பதால் நீங்கள் எளிதாக என்னை குழப்பப்படுத்த முயல்வது வீணர் செய்யும் செயலே . அறுதியிட்டு நிர்ணயிக்கும் எந்தன் எண்ணத்தின் செயல்பாடு இன்னும் புறப்படவில்லை எழுச்சிக்கான கணம் எப்பொழுதும் தேவைப்பட்டதில்லை இன்றும் அப்படியே . பொய்க்கின்ற யாவற்றிலும் உண்மையின் உரசல் மிச்சங்கள் சிறிது இருந்தாலும் அவை என்றும் என் நம்பிக்கையாகாது . எடுக்கப்பட்டவை என்னில் இருந்தாலும் கொடுக்கப்பட்டவை உன்னுடையது. தோன்றலின் வழியிலே பயணப்படுவது தன் அமைதியின் தொகுப்புகளாக உருமாறுகிறது . தி .ராஜேஷ் .