Posts

Showing posts from February 3, 2011

நம்பிக்கையாகாது .

வீறுகொண்டு எழ இன்னுமும் கீழே  விழுவதற்கு வழி வகை இல்லாமல் இருக்க சிந்தனையை  கூர்மையாக்குகிறேன் .. அதை கொண்டு  உருவாக்கிய  என் ரணத்தின் கோடுகள்  உங்களால் பார்க்க  இயலாமல் மறைக்கப்பட்டுள்ளது . இப்பொழுது இதை தெரிந்து வைத்திருப்பதால்  நீங்கள் எளிதாக என்னை குழப்பப்படுத்த முயல்வது  வீணர் செய்யும் செயலே . அறுதியிட்டு நிர்ணயிக்கும்  எந்தன் எண்ணத்தின்  செயல்பாடு   இன்னும் புறப்படவில்லை எழுச்சிக்கான கணம் எப்பொழுதும்  தேவைப்பட்டதில்லை இன்றும் அப்படியே . பொய்க்கின்ற யாவற்றிலும்  உண்மையின் உரசல்  மிச்சங்கள் சிறிது  இருந்தாலும் அவை  என்றும் என் நம்பிக்கையாகாது . எடுக்கப்பட்டவை என்னில்  இருந்தாலும்  கொடுக்கப்பட்டவை  உன்னுடையது. தோன்றலின் வழியிலே  பயணப்படுவது  தன் அமைதியின்  தொகுப்புகளாக  உருமாறுகிறது .                     தி .ராஜேஷ் .

சூல்நிலையாக்கம்.

ஆக்கத்தின் ஆளுமை  பல சிந்தனையின்  ஒரு வடிவை செய்வதற்கும்  எடுத்துரைக்கவும் வாய்ப்புண்டு .   அதனால் உணர்வதற்கு  வழிவகை இருப்பதாக இன்றும்  நம்பிக்கைக்கான விதை  வேரூன்றப்படுகிறது என்னில் . உடைக்கப்பட்ட பொருளின்  சிதறல்கள் ஒடுக்கப்படுவதால்  அதன் தடயத்தின்  இயல்பை மீறுவது  கேள்வியின் ஊடே உங்கள் அகத்தில் ஏற்றப்படுகிறது . மதிக்கப்படும் தீஞ்செயல்  ஒன்றை இதற்கு மேலும்  நான் புனிதப்படுத்த  தேவையில்லை  அவையாவும் ஏற்கனவே  விட்டொழியப்பட்ட  காரணத்தால் இன்றைய  உங்களின் கேள்விகள்    தேவையாய் இருக்கவில்லை  பிறகு அறிய போகும் பதில்  கண்டிப்பாக அப்பொழுது  உங்களுக்கானாதாக  இருந்திருக்காது.   ஒரு சூல்நிலையாக்கம்  உங்களில் நுழைந்து விடில்  மீண்டு விடுதல்  மற்றுமொரு வழியில்  உங்கள் கவனம்  சிதறடிக்கப்படுகிறது  உங்கள் சுயமும்  இதில் அடங்கி இருக்கலாம்.                              -தி .ராஜேஷ் .

நீ

Image
தொடக்கமும் முடிவும் புரியாத நிலை   உனக்கு  . உன்னை   பற்றி பல   கதைகளும் நிரூபணங்களும் இங்கு   ஏராளம்  . இருந்தும் யாருக்கும் தெரியாது என்ற   துணிவில் இருக்கும்   நீ. இதுவே   உன்னை நிரூபிக்க போதுமாகிறது எனக்கு . எதற்கு   எல்லாம் இவை   பொருந்துமோ அவையெல்லாம் நிரம்புகிறது  உந்தன் நிறைவுகளுடன்  .         - தி  . ராஜேஷ்  

அப்பாவிற்கான கடிதங்கள்

அலையின் நினைவுகளாய் இன்றும் கனவில் கடந்த காலத்தில் பயணிக்க வேண்டியிருந்தது இன்று கடிதமே முக்கிய நிகழ்வுகளாக இருந்து அதற்கான அறிகுறியாய் சில நாட்களாக கடிதங்கள்  பற்றிய கனவு முன்னறிவிப்பு இன்றி தோன்றியது அதன் சிந்தனையில் தோன்றியது எனக்கும் கடிதத்திற்கும் ஒரே தொடர்பு என் கிறுக்கலான எழுத்துக்களே அப்படிப்பட்ட கையெழுத்துக்கா கனவு வருகிறது இல்லையேல் தவறாக எதையாவது எழுதி அழித்ததை திரும்பவும் எழுத சொல்கிறதா எதை அறிவிக்க கடிதங்கள் கனவில் வந்தன குழப்பத்தில் கனவில்  இறுதியில்  எழுந்து விட்டேன் இன்றும் தூங்கா இரவு போல என்று யோசிக்கையில் அப்பாவிற்காக நாங்கள் எழுதிய கடிதங்கள் முன்னிலையாக வந்தது எப்படி இதை இத்தனை நாட்கள் மறந்து போனேன் என் மீது வெறுப்பு பரவுவதை உணர்ந்தேன் ,அப்பா ஊரில் முதலில் மளிகை கடை வைத்திருந்தார் .ஆயா ,அப்பா ,அம்மா ,அண்ணன் ,நான் ,தம்பி என அப்பொழுது எல்லாம்  மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது எங்கள் வாழ்வும் மகிழ்வும் .இன்றும் நினைவிருக்கிறது அப்பா எங்களுக்கு பல் விளக்குவது எப்படி என்று கூறியது வீட்டின் பின் புறம் பொலக்கடியில் நீண்டிருக்கும் கருங்களில் உட்கார வைத்து சொல்லி கொடுக்கும் வி