நம்பிக்கையாகாது .
வீறுகொண்டு எழ
இன்னுமும் கீழே
விழுவதற்கு வழி
வகை இல்லாமல்
இருக்க சிந்தனையை
கூர்மையாக்குகிறேன் ..
அதை கொண்டு
உருவாக்கிய
என் ரணத்தின் கோடுகள்
உங்களால் பார்க்க
இயலாமல்
மறைக்கப்பட்டுள்ளது .
இப்பொழுது இதை
தெரிந்து வைத்திருப்பதால்
நீங்கள் எளிதாக என்னை
குழப்பப்படுத்த முயல்வது
வீணர் செய்யும் செயலே .
அறுதியிட்டு நிர்ணயிக்கும்
எந்தன் எண்ணத்தின்
செயல்பாடு இன்னும்
புறப்படவில்லை
எழுச்சிக்கான கணம்
எப்பொழுதும்
தேவைப்பட்டதில்லை
இன்றும் அப்படியே .
பொய்க்கின்ற யாவற்றிலும்
உண்மையின் உரசல்
மிச்சங்கள் சிறிது
இருந்தாலும் அவை
என்றும் என்
நம்பிக்கையாகாது .
எடுக்கப்பட்டவை என்னில்
இருந்தாலும்
கொடுக்கப்பட்டவை
உன்னுடையது.
தோன்றலின் வழியிலே
பயணப்படுவது
தன் அமைதியின்
தொகுப்புகளாக
உருமாறுகிறது .
தி .ராஜேஷ் .
Comments
Post a Comment