நம்பிக்கையாகாது .

வீறுகொண்டு எழ
இன்னுமும் கீழே 
விழுவதற்கு வழி
வகை இல்லாமல்
இருக்க சிந்தனையை 
கூர்மையாக்குகிறேன் ..

அதை கொண்டு 
உருவாக்கிய 
என் ரணத்தின் கோடுகள் 
உங்களால் பார்க்க 
இயலாமல்
மறைக்கப்பட்டுள்ளது .

இப்பொழுது இதை
தெரிந்து வைத்திருப்பதால் 
நீங்கள் எளிதாக என்னை
குழப்பப்படுத்த முயல்வது 
வீணர் செய்யும் செயலே .

அறுதியிட்டு நிர்ணயிக்கும் 
எந்தன் எண்ணத்தின் 
செயல்பாடு   இன்னும்
புறப்படவில்லை
எழுச்சிக்கான கணம்
எப்பொழுதும் 
தேவைப்பட்டதில்லை
இன்றும் அப்படியே .

பொய்க்கின்ற யாவற்றிலும் 
உண்மையின் உரசல் 
மிச்சங்கள் சிறிது 
இருந்தாலும் அவை 
என்றும் என்
நம்பிக்கையாகாது .

எடுக்கப்பட்டவை என்னில் 
இருந்தாலும் 
கொடுக்கப்பட்டவை 
உன்னுடையது.
தோன்றலின் வழியிலே 
பயணப்படுவது 
தன் அமைதியின் 
தொகுப்புகளாக 
உருமாறுகிறது .
                    தி .ராஜேஷ் .





Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு