Posts

Showing posts from June 15, 2011

பகுப்பாய்வின் நிறைவு

Image
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை  http://puthu.thinnai.com/?p=2269 கவனமற்று இருக்கின்ற  அனைத்து இருப்பு கொள்கைகள்  எழுகின்ற கேள்வியை  பற்றிக்கொள்கிறது  தன் முனைப்பு . கேள்விகள் அழகியல்  தன்மை வாய்ந்தவை  கூடுதலான  மனத்திரை உடையவை  முக்காலத்திலும்  தொன்றுத்தொட்டு  வழக்கம் உடையவை . அதன் விடையில்  நிறைவு பெறாது  அடுத்த நிலைக்கு  ஆயுத்தப்படுத்தும்  மற்றுமொரு கேள்விகள்  தொடர்கின்ற அழகியல்  இயக்கமாகிறது . தன் பகுப்பாய்வின்  தீவிரத்தன்மை ஒவ்வொன்றும்  அர்த்தமுள்ளதாக  மாற்றுகிறது கற்பனையின்  வரையறைகள் . கேள்விகளும்  பதில்களும்   ஒன்றையே   தேடுதலின் நோக்கமாக  கொண்டுள்ளது  அவை  எப்பொழுதும்  நிறைவு தன்மை  உடையவனோ ?                 -வளத்தூர் தி.ராஜேஷ் .                          அன்பின் நன்றிகள் திண்ணை .

அதன் தொடர்ச்சி முறையே

Image
உள்ளமெங்கும் வழிந்தோடும்  தவிப்புகளை எழுதியும்  தீராத பக்கங்கள் இவை  எழுதிய பின்  எழுகின்ற சில நிமிட நிறைவை  நிலைநிறுத்தி கொள்ளும்    பொருளற்ற  நேரமின்மையும்  சற்று ஆறுதல்  அடைய செய்கிறது . சற்றும்  பொருத்தம்  இல்லாத ஒரு உருவகம்  ஒன்று இதில் விதைக்கப்படுகிறது  வேருன்றி அவையாகவே  தோற்றமளிக்கிறது . இயல்பின் அவமதிப்பு  கூடுமானவரை  உங்கள் வரையறையில்  விட்டு வைக்காது  மன திரை . விழுந்த காட்சிகள்  மறைந்து நின்றாலும்  நிலைத்து நின்று  எதிரொலிக்கிறது  அனுமானங்களின்  மிச்சங்கள் . அதன் தொடர்ச்சி முறையே .. மிச்சம்  இருக்கின்ற பழியின் தீரம்  ஒவ்வொன்றாக  கொலை செய்வதற்கு   முன்பாக ஒரு  புன்னகை பூக்கிறது . வாரத்தைகள்   தன் வன்மத்தை  தேடி கொள்கிறது  வடுவின் நினைவு பொக்கிஷமாக    மாற்றுவதற்காக .                         -வளத்தூர் .தி.ராஜேஷ் .