Posts

Showing posts from March 20, 2011

மனதின் அழைப்பு .

Image
நெடு நேரமாகவே மனதின் அழைப்பை  பொருட்படுத்தவில்லை  உனக்கும் எனக்கும் அவ்வளவு  தொலைவும் இல்லை . ஏற்கனவே எதிர்ப்பார்ப்பில்  இருப்பதால் அலட்சியமான   பெருமிதம்  கொள்வதற்கு எதுவாக  நானும்  மவுனமாகவே  மீண்டுமொரு முறை  மனதின் அழைப்பை கூறுகிறேன் . உன் சிறு அசைவில் செவி  கூர்மையாகவே இருப்பதை  வேடிக்கையாகவே கருதும்  எண்ணம் சிறிதும் இல்லை . தற்பொழுதிய அழைப்பு  முக்கியத்துவம் இருப்பதாக  உணர வைக்க முயற்சிக்கிறது  பொருள் இன்றைய நாளைய  வாழ்விற்கு அடிதளம் என்றது . பொருள் சார்ந்த அழைப்பு தான் . என்றுமே பொருட்படுத்தாத ஒன்றை  ஏற்று கொள்வது எவ்வளவு துன்பமானது  பொருள் சேர் என் இயலாமையாக இருப்பது கண்டுபிடித்து விட்டது இந்த அழைப்பு . என் பதற்றம் அதிகரிக்கிறது யாரும்  காணா வண்ணம் பழமை வாய்ந்த  இயல்பில் தடயம் இன்றி சேர்த்தேன்  பொருள் சேர் இயலாமை இனி  எனக்கானது அல்ல என உலகிற்கு  கூச்சமின்றி அறைகூவல் விடுத்தேன் . தன் பழியின் தீவரம் என் முன்னோர்கள் மீது  சுமத்த எனக்கும் வாய்ப்பு  வழங்கப்படிருக்கிறது  அழைப்பின் காரணிகள் மகிழ அதன் மனம் மட்டும்  தூற்றுகிறது இதுவரை நிர்பந்தத்தில் வாழ்ந்த  வாழ்வை போற்றுவதற்

நீடித்த பகற்பொழுதில் .

Image
நீடித்த ஒரு பகற்பொழுதில்  உங்களை நிலைகுலைய வைக்கும்  சம்பவம் நடைபெறலாம்  இல்லாமலும் போகலாம்  எச்சரிக்கையாக இருப்பது  தற்காத்து கொள்வதற்காக மட்டும் அல்ல  நீடித்த பகல் உங்களால் சோதனையிடப்படுகிறது அது மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக  அமைகிறது . தன் பகலின் தீர்மானம் ஒவ்வொன்றாக  நிறைவேற்ற எடுத்து கொண்டுள்ள  நம்பிக்கை எது வரை நீண்டிருக்கிறது  என்ற அச்சம் பொய்மையில் சங்கமிக்கிறது . இப்படிப்பட்ட நீடித்த பகல் நீங்கள்  வெறுப்பிற்கு உட்படுத்தப்படலாம் இல்லையெனில் நேசிப்பிற்கு  உடன்படலாம் . எதுவாயினும் உங்களின் சாதகம்  இதற்கு என்றுமே தேவையாய் இருக்க போவதில்லை . இந்த நீடித்த என்பதன் அர்த்தம்  உண்மையிலும் அந்த பகல் அடுத்த  நிலைக்கு தன்னை எடுத்து  செல்லவே இல்லை விரும்பவும் இல்லை .                                                     -தி .ராஜேஷ் .

கூறுமளவுக்கு.

Image
எதையும் கூறுமளவுக்கு இன்னும்  ஒன்றும் நடக்கவில்லை  அதாவது நான் எண்ணிய வாழ்வு  அப்படிப்பட்டது . ஏற்கனவே நிறைந்துள்ள நிர்பந்தம்  அனுகூலமாக இருந்தாலும்  புதிய செயலாக்கம் வெறும்  கற்பனை அளவிலாவது இருப்பது  உங்களுக்கும் நல்லதாகிறது. பின்பற்றும் வெறுமைக்கு பலவீனம்  இருக்குமானால் நான் அதுவாக மாறவே  விருப்பம் கொள்வேன்  சில காலத்திற்கு மட்டும் . சில கனமேற்றும் நினைவுகளை  கூடுமானவரை போற்றாமல்  அதன் தன்மையில் வாழ விடுவது  எளிதானது .                                -தி .ராஜேஷ்