உணர்தலின் இயக்கம்
என் வார்த்தைகளை கையாள்வதில் அச்சம் சூழப்பட்டுவிட்டது. இனியும் தோன்றலை மறைத்தல் ஒன்றை குறிப்பிட்டு வெளியிட முடியாது . எண்ணுகின்ற வெளிப்பாடு புரிவதற்கான அவசியம் இன்னுமும் தேவைப்படவில்லை மற்றவர்களுக்கும் எனக்கும் . முக்காலத்தினை சில சொற்களில் அடைத்து விடுவதால் அவை பெருவெளியை மறத்தலின் காட்சியாக மட்டுமே உணர்கிறது . என் வரிகள் ஒவ்வொன்றும் சலிப்பூட்டுபவை தொன்மையான பல வன்மங்களை விதைத்துள்ளேன் . அதன் புறக்கணிப்பின் கணம் மேலும் வலுப்படும் எண்ணமாகிறது. என் உணர்தலின் மகா இயக்கம் சுயத்தை பிரபஞ்ச குறியீட்டாக மாற்றி கொண்டிருக்கிறது . -வளத்தூர் தி.ராஜேஷ் .