Posts

Showing posts from November 6, 2011

உணர்தலின் இயக்கம்

என் வார்த்தைகளை கையாள்வதில்  அச்சம்  சூழப்பட்டுவிட்டது. இனியும்  தோன்றலை  மறைத்தல் ஒன்றை  குறிப்பிட்டு  வெளியிட முடியாது . எண்ணுகின்ற வெளிப்பாடு புரிவதற்கான அவசியம்  இன்னுமும்  தேவைப்படவில்லை  மற்றவர்களுக்கும்  எனக்கும் . முக்காலத்தினை  சில சொற்களில்  அடைத்து விடுவதால்  அவை  பெருவெளியை  மறத்தலின்  காட்சியாக மட்டுமே  உணர்கிறது . என் வரிகள்  ஒவ்வொன்றும்  சலிப்பூட்டுபவை  தொன்மையான  பல வன்மங்களை  விதைத்துள்ளேன் . அதன்  புறக்கணிப்பின் கணம்  மேலும் வலுப்படும்  எண்ணமாகிறது. என்  உணர்தலின்  மகா இயக்கம்  சுயத்தை  பிரபஞ்ச குறியீட்டாக  மாற்றி கொண்டிருக்கிறது .                               -வளத்தூர் தி.ராஜேஷ் .