உணர்தலின் இயக்கம்


என் வார்த்தைகளை
கையாள்வதில் 
அச்சம் 
சூழப்பட்டுவிட்டது.
இனியும் 
தோன்றலை 
மறைத்தல் ஒன்றை 
குறிப்பிட்டு 
வெளியிட முடியாது .

எண்ணுகின்ற வெளிப்பாடு
புரிவதற்கான அவசியம் 
இன்னுமும் 
தேவைப்படவில்லை 
மற்றவர்களுக்கும் 
எனக்கும் .

முக்காலத்தினை 
சில சொற்களில் 
அடைத்து விடுவதால் 
அவை 
பெருவெளியை 
மறத்தலின் 
காட்சியாக மட்டுமே 
உணர்கிறது .

என் வரிகள் 
ஒவ்வொன்றும் 
சலிப்பூட்டுபவை 
தொன்மையான 
பல வன்மங்களை 
விதைத்துள்ளேன் .
அதன் 
புறக்கணிப்பின் கணம் 
மேலும் வலுப்படும் 
எண்ணமாகிறது.

என் 
உணர்தலின் 
மகா இயக்கம் 
சுயத்தை 
பிரபஞ்ச குறியீட்டாக 
மாற்றி கொண்டிருக்கிறது .
                              -வளத்தூர் தி.ராஜேஷ் .






Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு