உணர்தலின் இயக்கம்
என் வார்த்தைகளை
கையாள்வதில்
அச்சம்
சூழப்பட்டுவிட்டது.
இனியும்
தோன்றலை
மறைத்தல் ஒன்றை
குறிப்பிட்டு
வெளியிட முடியாது .
எண்ணுகின்ற வெளிப்பாடு
புரிவதற்கான அவசியம்
இன்னுமும்
தேவைப்படவில்லை
மற்றவர்களுக்கும்
எனக்கும் .
முக்காலத்தினை
சில சொற்களில்
அடைத்து விடுவதால்
அவை
பெருவெளியை
மறத்தலின்
காட்சியாக மட்டுமே
உணர்கிறது .
என் வரிகள்
ஒவ்வொன்றும்
சலிப்பூட்டுபவை
தொன்மையான
பல வன்மங்களை
விதைத்துள்ளேன் .
அதன்
புறக்கணிப்பின் கணம்
மேலும் வலுப்படும்
எண்ணமாகிறது.
என்
உணர்தலின்
மகா இயக்கம்
சுயத்தை
பிரபஞ்ச குறியீட்டாக
மாற்றி கொண்டிருக்கிறது .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment