பிரபஞ்ச கருவின் உயிர்தெழுதல்
உன் அகாலத்தில்
எங்கள் அருவும்
கொண்டு உயிர்த்திருந்தாய்.
உன் இருப்பின் அமைவு
இன்றியும்
உணர்ந்து கொண்டிருக்கிறோம்
கரு இழந்த
பிரபஞ்சத்தில் .
விண்ணகி
விண்ணகன்
என்று முடிவிலியாய்
ஓலமிடுகிறது
நம் மனம் .
நம் கண்ணீரை
ஏந்தி கொள்ள
காலம்
போதாது தான் .
இதனை மீறியும்
ஏற்றுக்கொள்ள
எங்களிடம்
ஏதுமில்லை .
கைவிடப்பட்ட உயிர் கரு
அகாலம் கொண்டு
நம்மை உயிர் கொண்டிருக்கிறது .
நம் பிரபஞ்ச அகாலத்தில்
உன் அருவம்
அதன் அன்பும், நினைவும்
முடிவிலியாய்
என்னென்றும் நிலைத்திருக்கும் .
நம் இழப்பின் வழியே
உயிர்த்தெழும் காலம் .
சென்று வா
விண்ணகி /விண்ணகன்
உன் மரணத்தில்
மீண்டும்
பிரபஞ்ச கரு உயிர்தெழும் .
தி.ராஜேஷ் ,மகாலட்சுமி
எங்கள் அருவும்
கொண்டு உயிர்த்திருந்தாய்.
உன் இருப்பின் அமைவு
இன்றியும்
உணர்ந்து கொண்டிருக்கிறோம்
கரு இழந்த
பிரபஞ்சத்தில் .
விண்ணகி
விண்ணகன்
என்று முடிவிலியாய்
ஓலமிடுகிறது
நம் மனம் .
நம் கண்ணீரை
ஏந்தி கொள்ள
காலம்
போதாது தான் .
இதனை மீறியும்
ஏற்றுக்கொள்ள
எங்களிடம்
ஏதுமில்லை .
கைவிடப்பட்ட உயிர் கரு
அகாலம் கொண்டு
நம்மை உயிர் கொண்டிருக்கிறது .
நம் பிரபஞ்ச அகாலத்தில்
உன் அருவம்
அதன் அன்பும், நினைவும்
முடிவிலியாய்
என்னென்றும் நிலைத்திருக்கும் .
நம் இழப்பின் வழியே
உயிர்த்தெழும் காலம் .
சென்று வா
விண்ணகி /விண்ணகன்
உன் மரணத்தில்
மீண்டும்
பிரபஞ்ச கரு உயிர்தெழும் .
தி.ராஜேஷ் ,மகாலட்சுமி
வலைச்சரம் மூலமாக தங்களது வலைப்பூவினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் நன்றி நண்பரே .
ReplyDelete