நிறைவின் தொடக்கம்
உன் கற்பனை வைத்து ஒன்று செய்ய முடியாது இப்பொழுது . என்னை தவிர . ஒன்றின் ஒலி பிரபஞ்சத்தை கடக்க வேண்டுமெனில் ஒரே வழி இப்பொழுதே அதை கேட்க வேண்டும் . இதற்கும் குறிப்பெடுத்துக்கொள் சற்றே நீளும் நீ அறிந்திடா நொடிகளும் அதன் மவுனமும் என்னிலும் உள்ளதென . நேற்றைய இரவில் என் வழியெங்கும் உன் காத்திருப்பின் நேசங்கள் என் பயணத்தோடு நீண்டு கொண்டு இருந்தது . இப்படியே விட்டு விடு ஒளித்து வைத்துகொண்ட புன்னகையை எப்படியும் என் இரவு கண்டுபிடித்துவிடும் . சில நினைந்திடுதல் என் நிறைவின் தொடக்கம் ஆகிறது . வளத்தூர் தி .ராஜேஷ்