நிறைவின் தொடக்கம்
உன் கற்பனை வைத்து
ஒன்று செய்ய முடியாது
இப்பொழுது .
என்னை தவிர .
ஒன்றின் ஒலி பிரபஞ்சத்தை
கடக்க வேண்டுமெனில்
ஒரே வழி
இப்பொழுதே
அதை கேட்க வேண்டும் .
இதற்கும் குறிப்பெடுத்துக்கொள்
சற்றே நீளும் நீ அறிந்திடா
நொடிகளும் அதன் மவுனமும்
என்னிலும் உள்ளதென .
நேற்றைய இரவில் என் வழியெங்கும்
உன் காத்திருப்பின் நேசங்கள்
என் பயணத்தோடு
நீண்டு கொண்டு இருந்தது .
இப்படியே விட்டு விடு
ஒளித்து வைத்துகொண்ட
புன்னகையை எப்படியும்
என் இரவு கண்டுபிடித்துவிடும் .
என் நிறைவின்
தொடக்கம் ஆகிறது .
வளத்தூர் தி .ராஜேஷ்
Comments
Post a Comment