Posts

Showing posts from October 17, 2011

அதில். -திண்ணை.

இந்த வாரம் திண்ணையில்  வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=5041 ஓர் எண்ணம்  மன தொலைவுகளை  கடந்து கொண்டிருக்கிறது  இக்கணம் . அதில்  நம் கனவுகள் மீதம்  கொண்டு உருவாக்கப்படுகிறது  இந்த இரவு. அதில்  சிதறல் கொண்டிருந்த  ஒரு மவுனம்  மன ஒலிகளில்  விழுங்கப்படுகிறது . அதில்  ஒன்றும்  நிகழ்த்தியிருக்கவில்லை ஒரு அக மவுனமே  அனைத்தும்  சாத்தியமாக்கியது . அதில்  என்னை விதைக்கும்  பிரபஞ்சத்தில்  இயக்கமாவேன்  உணர்த்துவதற்கு காலம்  பின் தொடரும்  பிறகு  நீயும் . அதில்  நிறைவு தன்மையற்ற  பகிர்வுகள் நேற்றைய  மீதம் கொண்டு  வளர்த்தெடுக்கப்படுகிறது . அதில்  நீடித்து நிலைத்திருக்கும்  தன் பிரபஞ்ச இயக்கங்களின்  தன்மையில் பெற்றிருப்பவை  என் காலமும் சிறிது  பெற்று கொள்கிறது .                       -வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .