Posts

Showing posts from November 5, 2013

சுய தேடலின் நுட்ப நிலை .

ஆழ் மன கடலில் தன் ஒற்றை படகாய் செலுத்திக்கொண்டிருக்கிறது அவரவர் அன்பின் காலம் . நினைவின் அலைகளில் ஆர்பரிக்கிறது தன் இயலாமையின் வன்மம் . முன் காலத்தில் பயணித்த மற்றொரு ஒற்றை படகை கடந்து கொண்டிருக்கிறேன் அதில் தன்னின் பிரதிபலிப்பில் மற்றொரு நான் . வழியெங்கும் ஆங்காங்கே தனித்த படகுகளில் நான் . அனைத்தையும் ஒன்றிணைத்தேன் . இன்னுமும் தன்னையை முன்னெடுக்க மற்றொரு படகு வந்து கொண்டிருக்கிறது . - வளத்தூர் தி.ராஜேஷ் .