Posts

Showing posts from November 21, 2011

மகா சந்திப்பொன்றில் -திண்ணை

என் முப்பதாவது எண்ணத்தின் பகிர்வு அன்பின் நன்றிகள் திண்ணை  நண்பர்களுக்கு.. http://puthu.thinnai.com/?p=6279 மகா சந்திப்பொன்றில்  சுய பகிர்வு உள்ளடக்கிய  வாரத்தைகளை  தேடி கொண்டிருக்கையில்  ஊடுருவும் பார்வை  விடுவித்து கொள்ளும்  மவுனம்  கடந்து கொண்டிருக்கிறது . உன் வெட்க  நிற பிரிகையில்    வண்ணங்களை  தூவி கொண்டிருக்கிறாய்  பொழிவின் ஒளி பிரபஞ்சத்தை  மறைப்பதாக இருக்கிறது . போதும் விட்டு விடு  உன் ஒவ்வொரு  செய்கை  நம் நிறைவின்  தொடக்கமாகிறது . நொடிகளை  இச்சமயம் பழித்து கொண்டிருக்கிறது  நம் எண்ணங்கள் . முடிவிலி காலம்  உண்டெனில் அது இதுவாக  இருக்க கடவது . அதில்  இப்பொழுது உன்  கற்பனைகளை  வைத்து ஒன்றும்  செய்ய இயலாது  என்னைத்தவிர . அவ்வாறே நானும்  ஆக்கப்பட்டேன்  மகா சந்திப்பொன்றில் .                 -வளத்தூர் தி.ராஜேஷ் .