மகா சந்திப்பொன்றில் -திண்ணை
என் முப்பதாவது எண்ணத்தின் பகிர்வு அன்பின் நன்றிகள் திண்ணை நண்பர்களுக்கு.. http://puthu.thinnai.com/?p=6279 மகா சந்திப்பொன்றில் சுய பகிர்வு உள்ளடக்கிய வாரத்தைகளை தேடி கொண்டிருக்கையில் ஊடுருவும் பார்வை விடுவித்து கொள்ளும் மவுனம் கடந்து கொண்டிருக்கிறது . உன் வெட்க நிற பிரிகையில் வண்ணங்களை தூவி கொண்டிருக்கிறாய் பொழிவின் ஒளி பிரபஞ்சத்தை மறைப்பதாக இருக்கிறது . போதும் விட்டு விடு உன் ஒவ்வொரு செய்கை நம் நிறைவின் தொடக்கமாகிறது . நொடிகளை இச்சமயம் பழித்து கொண்டிருக்கிறது நம் எண்ணங்கள் . முடிவிலி காலம் உண்டெனில் அது இதுவாக இருக்க கடவது . அதில் இப்பொழுது உன் கற்பனைகளை வைத்து ஒன்றும் செய்ய இயலாது என்னைத்தவிர . அவ்வாறே நானும் ஆக்கப்பட்டேன் மகா சந்திப்பொன்றில் . -வளத்தூர் தி.ராஜேஷ் .