மகா சந்திப்பொன்றில் -திண்ணை

என் முப்பதாவது எண்ணத்தின் பகிர்வு
அன்பின் நன்றிகள் திண்ணை நண்பர்களுக்கு..


http://puthu.thinnai.com/?p=6279


மகா சந்திப்பொன்றில் 
சுய பகிர்வு உள்ளடக்கிய 
வாரத்தைகளை 
தேடி கொண்டிருக்கையில் 
ஊடுருவும் பார்வை 
விடுவித்து கொள்ளும் 
மவுனம் 
கடந்து கொண்டிருக்கிறது .

உன் வெட்க 
நிற பிரிகையில்   
வண்ணங்களை 
தூவி கொண்டிருக்கிறாய் 
பொழிவின் ஒளி
பிரபஞ்சத்தை 
மறைப்பதாக இருக்கிறது .
போதும் விட்டு விடு 
உன் ஒவ்வொரு  செய்கை 
நம் நிறைவின் 
தொடக்கமாகிறது .

நொடிகளை 
இச்சமயம்
பழித்து கொண்டிருக்கிறது 
நம் எண்ணங்கள் .
முடிவிலி காலம் 
உண்டெனில்
அது இதுவாக 
இருக்க கடவது .
அதில் 
இப்பொழுது உன் 
கற்பனைகளை 
வைத்து ஒன்றும் 
செய்ய இயலாது 
என்னைத்தவிர .
அவ்வாறே நானும் 
ஆக்கப்பட்டேன் 
மகா சந்திப்பொன்றில் .
                -வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு